Wednesday, August 17, 2011

தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்

Page 1 of 2:1 2 »

Thursday, June 2, 2011

சமச்சீர் கல்வி திட்ட ரத்தைக்கண்டித்து திமுக போராடதது ஏன்...?

சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தனியார் பள்ளிக்கல்வி கட்டண கொள்ளையை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





Saturday, April 23, 2011

போர்க்குற்றவாளி மகிந்தவுக்கு துணைபோன இந்திய அரசே மன்னிப்பு கேள்: பெரியார் திக ஆர்ப்பாட்டம்

சிங்கள அரசுக்கு எதிரான ஐ.நா அறிக்கையின் எதிரொலியாக ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய கொடூரமான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும், துணை நின்ற இந்திய அரசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், இலங்கை மீதான இந்திய வெளியுறவு கொள்கைகளை மாற்ற கோரியும்,....

பன்னாட்டு விசாரணை குழு அமைக்க கோரியும், தமிழ்நாடு முழுவதும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் “பெரியார் திராவிடர் கழகம்” சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார் தலைமையில் பாமக தோழர் வியனரசு தொடங்கிவைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சி.ஆ.காசி ராசன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் முருகேசனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சுஜித் , தூத்துக்குடி பெரியார் திக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, துணைத்தலைவர் வே.பால்ராசு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட விளக்கவுரையினை இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றினார்.

நிகழ்வில் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் மதன், பால்.அறிவழகன், பாலசுப்பிரமணியன், சா.த.பிரபாகரன், ரவிசங்கர், அமிர்தராசு, அகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் புஇமு, தமிழ்ப்புலிகள் அமைப்பினரும் கலந்துகொண்டனர்..



சேலம் மாநகரில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



கோவையில் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.


பொள்ளாச்சியில் நகரச்செயலாளர் காசு.நாகராசன் தலைமையிலும், கரூரில் மாவட்டத்தலைவர் கு.தனபால் தலைமையிலும் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.


போராட்டத்தில் மதிமுக, ஆதித்தமிழர் பேரவை, கொங்கு இளைஞர் பேரவை புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டு இந்திய அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

















Sunday, January 30, 2011

முத்துக்குமாரின் சொந்த ஊரில் அணிதிரண்ட தமிழினம்

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 29 இல் முத்துக்குமரனின் பிறந்த இடமான கொழுவைநல்லூர் நோக்கி தமிழினமே அணிதிரள்வோம் என்ற நோக்கத்தோடு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர்கள் பகத்சிங் மற்றும் தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் மதுரையிலிருந்து வாகன பேரணியாக கொழுவை நல்லூர் நோக்கி திரளான மக்கள் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மதுரை தமுக்கம் தமிழன்னை சிலையிலிருந்து கொழுவை நல்லூர் நோக்கி சுடரோட்டம் வாகன அணிவகுப்பு காலை 10 மணியளவில் தொடங்கியது.

இவ் அணிவகுப்பானது நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொண்டு போராடிய வழக்கறிஞர்கள் பகத்சிங், தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் முத்துக்குமார் வீரவணக்க பிரச்சாரம் செய்தனர். பின்னர் மாலையில் வடக்கு ஆத்தூரிலிருந்து தியாகச்சுடர் ஏந்தி நடை பேரணியாக கொழுவை நல்லூர் முத்துக்குமாரன் வீடு வரை பேரணியாக சென்றனர்.

முத்துக்குமார் இல்லத்தில் வீரவணக்க நிகழ்வு தியாகி இம்மானுவேல் பேரவை தலைவர் சு.சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. தியாகச்சுடரினை முத்துக்குமாரின் பாட்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் வீரவணக்கவுரையாற்றினார். தொடர்ந்து வழக்கறிஞர் பகத்சிங் உரையாற்றினார். இறுதியாக பேரணியில் பங்கேற்ற தமிழுணர்வாளர்களுக்கு வழக்கறிஞர் தங்கப்பாண்டியன் நன்றியுரையாற்றி அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் மதுரையிலிருந்து 200க்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஊர்தியில் வந்திருந்தனர். பெண்களும், குழந்தைகளும் திரளாக வந்திருந்தது எழுச்சியை ஏற்படுத்தியது. நிகழ்வில் பெண்கள் விடுதலை மய்ய தோழர் அகராதி, பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார், மாநகர செயலாளர் பால்.அறிவழகன், தமிழ்நாடு மாணவர் கழக அகரன், மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தமிழரசன், தமிழ் புலிகள் அமைப்பின்ர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.









Monday, January 24, 2011

தமிழருக்கான தேசிய சிந்தனைகள் மக்கள் மனதில் உதிக்கட்டும், மலரட்டும்: கொளத்தூர் மணி

முத்துக்குமார் இனவெழுச்சி சுடர்பயணம் இன்று நீலகிரியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொளத்தூர் மணி தனது உரையாற்றுகையில் " தமிழருக்கான தேசிய சிந்தனைகளும், தமிழ் தேசிய தேவையும் மக்கள் மனதில் இப்பயணத்தால் உதிக்கட்டும், வளரட்டும் என்று தெரிவித்துள்ளார்.





Friday, December 10, 2010

மனித உரிமை மீறலை தடுப்போம் அரச பயங்கரவாதத்தை எதிர்ப்போம்

மனித உரிமை மீறலை தடுப்போம் அரச பயங்கரவாதத்தை எதிர்ப்போம் என்ற முழக்கத்தோடு மனித உரிமை நாளான திசம்பர் 10 இல் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.

தமிழக சிறையில் நீண்ட நாள் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் பொய் வழக்கு போட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானி ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு தோழர் பெனடிக் தலைமையேற்றார். தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர் அகமது இக்பால் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர் ஞானசேகரன் மக்கள் உரிமைக்கூட்டமைப்பு துரை அரிமா, இ.பொ.க அ.மோகன்ராசு, கிறித்த வாழ்வுரிமை இயக்கம் பணி. சுந்தரி மைந்தன், தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச்செல்வன், பீற்றர், பெரியார் திராவிடர் கழக பால்.பிரபாகரன், உழைக்கும் மக்கள் விடுதல இயக்க வெனி.இளங்குமரன், த.ஒ.வி.ஒ. தமிழ்மாந்தன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிகழ்வில் பெதிக மாவட்ட துணைத்தலைவர் வெ.பால்ராசு, மாவட்ட இணைச்செயலர் க.மதன், தமுமுக அபுபக்கர் சித்திக் மனித நேய மக்கள் கட்சி காஜா மைதீன், அ.இ.பெ.ம. சந்திரசேகர், மற்றும் திரளனா தோழர்கள் கலந்துகொண்டனர்.

ராஜீவ் வழக்கில் கைது செய்யட்டிருப்பவர்களை விடுதலை செய்யக்கோரியும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை அமுல்படுத்திவரும் அரச பயங்கரவாதத்தைக்கண்டித்தும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.