Sunday, July 22, 2012

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே!

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பாக கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மாலை 5 மணியளவில் தோழர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்வு, மாவட்ட தலைவர் அன்புரோசு தலைமை யில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர பொறுப் பாளர் சிங் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆதித் தமிழர் பேரவை சூரியன் துவக்க உரையாற்றினார். தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.அ.குமார், பொருளாளர் மதன், தூத்துக்குடி நகர செயலாளர் பால் அறிவழகன், அமிர்தராசு, கனகராஜி உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, July 10, 2012

இன்று(10.07.2012) இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெரியார்திக தலைவர் கொளத்தூர் மணி பேசுகிறார்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று இரவு (10.07.2012)  9 மணி அளவில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனி படுகொலை தொடர்பாக பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் பல அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பேசுகிறார்.