Thursday, September 17, 2009

தந்தை பெரியார் 131வது பிறந்தநாள் நெல்லையில்

தந்தை பெரியாரின் 131வது பிறந்த நாளான இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை தந்தை பெரியார் சிலைக்கு தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.



பாளையங்கோட்டை பெரியார் சிலையின் பராமரிப்பாளர்களான பெரியார் திராவிடர் கழகத்தின் தருண் வீடியோஸ் மற்றும் பெரியார் திகவின் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன் , நெல்லை ராசா ஆகியோர் நேற்று இரவு தந்தை பெரியாரின் சிலைக்கு வண்ணம் பூசிவிட்டு நெல்லை முழுவதும் சுவரொட்டியை ஒட்டினார்கள்.

தூத்துக்குடியில் மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , மாவட்ட துணைச்செயலாளர் க.மதன் ஆகியோர் காலை 3 மணி வரை தூத்துக்குடி முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

சுவரொட்டியில் " தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாளான இன்று பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அடித்தளமக்களிடத்தில் கொண்டு செல்ல உறுதி ஏற்போம்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.


இன்று காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை பெரியார் சிலை மாலை அணிவகுப்பு நிகழ்வில் நெல்லை மாவட்டச்செயலாளர் சி.ஆ.காசிராசன், தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு,தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார் ,தூத்துக்குடி மாநகர துணைத்தலைவர் ரவிசங்கர்,தூத்துக்குடி மாநகர துணைச்செயலாளர் கனகராசு, தூத்துக்குடி மாநகர பொருளாளர் அகரன் , நெல்லை ராசா மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.



No comments: