Wednesday, March 25, 2009

கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி இராஜா திரையரங்கம் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலையருகில் 20।03.2009 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தோழர் இயக்குனர் சீமான், தோழர் சம்பத் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை கண்டித்து (தேசிய பாதுகாப்புச்சட்டத்தில்) கைகளில் விலங்கிட்டும் வாயில் கருப்பு துணிக்கட்டியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் பெருமளவிலான தோழர்களும் தோழமை அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

No comments: