Wednesday, March 25, 2009

காணொளி: பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கைது செய்யப்பட்டதற்கு காரணமான உரை

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் 26.02.2009 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எரிகிறது ஈழம் என்ற தலைப்பில் உரையாற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவ்வுரையின் காணொளிகளை இங்கே காணவும். ராஜீவ் கொலையல்ல! மரண தண்டனை என்றும் , நாள்தோறும் ஈழத்தில் தமிழ் உறவுகள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை காப்பாற்ற எண்ணாமல் TELO , EROS முதலான போராளி அமைப்புகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஒன்றாக புலிகளாக போராடிக் கொண்டிருப்பது தெரியாமல் சகோதரச் சண்டை என்று அறிவுக்கு ஒவ்வாமல் மனிதநேயமில்லாமல் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களை கண்டித்தும், தமிழீழத்தேசிய தலைவர் அவர்களை கைது செய்ய தீர்மானம் இயற்றிய ஜெ.ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை பற்றிய உண்மைகளை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி உரையாற்றினார்.

இவ்வாறு அரசியல்வாதிகளின் மனிதநேயமற்ற நாடகத்தினை மக்களுக்கு தெளிவாக கூறியதால் தமிழின துரோக அரசானது தமிழுணர்வாளர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது। ஏற்கெனவே ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தனது தோட்டத்திலேயே ஈழப்போராளிகளை தங்க வைத்து போராளிகளுக்கு பயிற்சி அளித்ததற்காகவும், வேலூர் சிறையிலிருந்து போராளிகள் சுரங்கம் தோண்டி தப்பியதற்கு உதவியதாகவும், கர்நாடக வாழ் தமிழர்களை காக்க போராடியதற்காகவும் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்.


கொளத்தூர் மணி திண்டுக்கல் உரை @ Yahoo! Video


இணையங்களில் காண : தமிழ்வின்

மீனகம்

No comments: