Monday, March 16, 2009

கொளத்தூர் மணி , சீமான் , நாஞ்சில் சம்பத் கைதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க நாஞ்சில் சம்பத், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் திண்டுக்கல்லில் 16.03.2009 அன்று மாலை 4.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை.சம்பத் தலைமையில் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் க.சூ.இரவணா, ம.தி.மு.க மாவட்டச்செயலாளர் செல்வராகவன், விடுதலைச்சிறுத்தைகள் நகரச்செயலாளர் அன்பரசு, திருச்சித்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் பேட்ரிக் சகாயராஜ், அருட்திரு பிலிப் சுதாகர், தமிழர் தேசிய இயக்க மாநிலத் துணைத்தலைவர் கு.செ.வீரப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி பாண்டியன், சி.பி.ஐ.( எம்.எல்) மாவட்டச்செயலாளர் ஆபிரகாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெ.தி.க நகரத் தலைவர் துரை.சுப்பிரமணி நன்றி கூறினார்.

பெரியார் நம்பி, பழனி நல்லதம்பி, திருச்செல்வம், முருகன், குணா, செம்பட்டி ஆல்பர்ட், பாரத், கிருட்டிணமுர்த்தி உட்பட பல தோழர்களும் கலந்துகொண்டனர்.



No comments: