Wednesday, March 11, 2009

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணிக்கு ஓராண்டு ஓய்வு

பெரியார் திராவிடர் கழகத்தின செயல்பாடுகளை கண்டு நடுங்கிய தமிழர் விரோத அரசியல் கட்சிகள் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு ஓராண்டு கட்டாய ஓய்வினை அளித்துள்ளார்கள்.

இதற்கு முன்பாக இவர் தனது தோட்டத்தில் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகவும் , போராளிகளுக்கு உதவியதாகவும் கர்நாடக வாழ் தமிழர்களுக்காக போராடியதற்காகவும் 6 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் ஓய்வெடுத்தவர்.

ஈழ வியாபாரிகள் அதிகம் இருக்கும் இவ்வேளையில் உண்மையிலேயே தமிழ்மக்களுக்காகவும் தமிழீழ மக்களுக்காகவும் தமிழகத்திலே போராடும் ஒரே அமைப்பு பெரியார் திராவிடர் கழகம் என்று கணித்த தமிழின விரோத அரசானது சுயநல அரசியல் சாக்கடையில் இறங்காமல் ஓய்வேயில்லாமல் மக்களிடத்திலே பணியாற்றிக்கொண்டிருந்த கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து ஓராண்டு சிறையில் அடைத்துள்ளது.

வரலாறு அவரை விடுதலை செய்யும்.........

No comments: