Saturday, February 28, 2009

ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி வந்த பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி பலர் கைது

தூத்துக்குடியில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஈழம் என்பதை ஏற்றுக்கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரிலே பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன.108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது.

இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து தூத்துக்குடி சென்றார்.

தமிழர் விரோதப்போக்கையே கடைப்பிடித்து இந்திய நாடாளுமன்றத்திலும் இராஜபக்சேயின் குரலையே ஒலித்த பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி இராஜாஜி பூங்கா அருகில் மதியம் 2.30 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் , தமிழர் தேசிய இயக்கத்தின் தூத்துக்குடி தமிழ்நேயன் ஏற்பாட்டில் , பெரியார் திராவிடர் கழக பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்தினை செருப்பாலும் , துடைப்பத்தாலும் அடித்து நெருப்பால் எரித்தனர். பின்பு ஊர்வலமாக செல்ல முயன்ற அனைவரும் வி.வி.டி சிக்னல் அருகில் காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்க சுக.மகாதேவன் , பெரியார் திராவிடர் கழக மாநகரத்தலைவர் கோ.அ.குமார் , தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் டி.பிரபு , மனித உரிமைக்கழக வழக்கறிஞர் அதிசயகுமார் , பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு, மதிமுக தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜோயல், வழக்கறிஞர் நக்கீரன் , பெரியார் திராவிடர் கழக பால்ராசு சா.த.பிரபாகரன் , க.மதன், வ.அகரன் விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் , இந்திய பொதுவுடைமைக்கட்சியின் க.மோகன் , சந்தானம் , விடுதலைச்சிறுத்தைகள் மாநகரத்தலைவர் செந்தமிழ்பாண்டியன் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டு கைதாகினார்கள்.

No comments: