Sunday, February 8, 2009

கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஈழத்தமிழர் இன அழிப்பைக்கண்டித்து உண்ணாநிலைப்போராட்டம்


ஈழத்தமிழர் படுகொலையைக்கண்டித்து பல்வேறு அமைப்புகளும் அரசியல்கட்சிகளும் போராடி வரும் நிலையில் ஈழத்தமிழர் இன அழிப்பைக்கண்டித்து கத்தோலிக்க திருச்சபையின் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது.

தென் தமிழகமான தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (08.02.2009) காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை முதல் வாயில் காந்தி சிலை முன்பாக கத்தோலிக்க ஆயர் இல்ல மறைமாவட்ட முதன்மைக்குரு பேரட்திரு.ஆசுவால்ட் அடிகளார் தலைமையில் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மறைதிரு. சுந்தரிமைந்தன் அவர்கள் கவனித்தார்.

நிகழ்வில் சிறப்புரையாக பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் ஈழ நிலைமைகளை தெளிவுபட விளக்கினார். ஆதித்தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் க.கண்ணன் , இளைஞரணி செயலாளர் வெ.மனோகர் , பெரியார் திக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு , தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபு , வழக்கறிஞர் அதிசயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உண்ணாநிலைப்போராட்டத்தினை வாழ்த்தி இந்திய - சிங்கள கூட்டு ஈழத்தமிழின அழிப்பைக்கண்டித்து பேசினார்கள்.

இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றது.





No comments: