Sunday, February 15, 2009

தோழமை இயக்க ஈழ ஆதரவு செய்தி தொகுப்புகள் 1

உணர்ச்சிப் பெருவெள்ளமான பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் "ஈழத்தமிழர் ஆதரவு அமைதிப் பேரணி"
[ 2009-02-15 18:31:20 ] []
பெங்களூர் தமிழ்சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு பேரணி தமிழர்களின் உணர்ச்சிப்பெருக்கால் ஆவேசப்பேரணியாக மாறியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு உண்டாகியது. [மேலும்]




thanjai_15_02_2009_002தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கருணாநிதி நகரில் பொதுமக்கள் சார்பாக தமிழ் ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி உண்ணா விரதம் 15.2.2009 காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது. (more…)




காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் - புதுச்சேரி உண்ணாநிலைப்போராட்டத்தில் வெளியீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009, 04:33.43 PM ] []
ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் இன்று உண்ணாப்போராட்டம் நடந்தது. இந்நிகழ்வில் காங்கிரஸ் பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. [மேலும்]



No comments: