
சிங்கள அரசு போரை நிறுத்த வேண்டியும் இனி மேலும் தமிழினப் படுகொலை தொடரக் கூடாதென்றும் மத்திய அரசு இப் பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டியும் ஏற்காடு பேருந்து நிலையத்தில் 21,12,2008 காலை 8 மணி முதல் இரவு 5 மணிவரை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது,இதில் நீலமலை தோட்டத் தொழிளாளர் தலைவர் திரு, வீ,க. நல்லமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் போக்குவரத்து தொழிளாளர் சம்மேளனம். சேவராய் தொழிளாளர் சம்மேளனம் ஆகியோர் கலந்து கொண்டனர்,
இதனைத் அடுத்து பெரியார் தி,க, ஏற்காடு ஒன்றியத்தின் சார்பில் ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தோழர் சீமான் , தோழர் பெ.மணியரசன் இவர்களை விடுதலை செய்யக் கோரியும் காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன் ஞானசேகர் இவர்களை கண்டித்து கண்டன உரையும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது, ஏற்காடு ஒன்றிய செயளர் இரா.உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

விரைவில் செய்திகளை தோழர்கள் : www.periyardk.org என்ற தளத்திலும் காணலாம்.
No comments:
Post a Comment