Sunday, December 21, 2008

சென்னை: தலைவர் கொளத்தூர் மணி கைதைக்கண்டித்து பு.இ.மு ஆர்ப்பாட்டம்-இ



ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக பேசியதற்காக பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி , பெ.மணியரசன் , இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக் கைதை கண்டித்து போராடிய ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் தமிழக போலீஸ் கைது செய்தது. இக்கைதை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி
, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் கண்டன சுவரொட்டிகள் மூலம் அம்பலப்படுத்தியது.
கருணாநிதி அரசே !
* ஈழவிடுதலை ஆதரவாளர்களை கைது செய்யாதே !
* கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய் !
* சிங்கள கைக்கூலிகளை கைது செய் !
என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் ஒரு பகுதியாக சென்னையில் பேருந்துகளிலும் மற்றும் சென்னை உள்ளிட்ட திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரகணக்கான கண்டன சுவரொட்டிகள் பரப்புரை செய்தனர்.

No comments: