Sunday, November 16, 2008

ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து புதுவையில் தெருமுனைக்கூட்டங்கள்

ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து புதுவையில் தெருமுனைக்கூட்டங்கள்


ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்தும் இந்திய அரசு போரை நிறுத்த வற்புறுத்தக் கோரியும் புதுவை மாநில அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்டமாக புதுவை மேற்குப் பகுதி கிராமங்களில் 14-11-2008 அன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக புதுவை நகரப் பகுதிகளில் 15-11-2008 அன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக 17-11-2008 அன்று மாலை 4.00 மணிமுதல் புதுவை தெற்குப் பகுதி கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த தெருமுனைக் கூட்டங்களை பெரியார் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னின்று நடத்துகிறது மற்றும் பல்வேறு இயக்கங்கள் பங்கேற்கின்றன.

பெரியார் திராவிடர் கழக தோழர்கள் பெருமளவில் இந்த தெருமுனைக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். இந்த தெருமுனைக் கூட்டங்களில் இளைஞர் காங்கிரசு பாண்டியனை கைது செய்யக் கோரியும் புதுவை அமைச்சர் மலையாளி வல்சராஜ் பதவி விலகக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

No comments: