Sunday, November 16, 2008

தமிழர்களுக்காக எப்பொழுதும் போராடும் ஒரே இயக்கம் பெரியார் தி.க. - நடிகர் விஜய் இரசிகர்கள்

ஈழத்தமிழரைக்கொன்று குவிக்கும் சிங்கள அரசைக்கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடிகர் விஜய் இரசிகர் மன்றத்தினர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி 1 ஆம் வாயில் அருகே தூத்துக்குடி விஜய் இரசிகர் மன்றத்தலைவர் பில்லா ஜெகன் தலைமையில் உண்ணாநிலைப்போராட்டத்தை தி.மு.க.வின் தூத்துக்குடி மாநகர செயலாளர் S.R.ஆனந்தசேகரன் துவக்கிவைத்தார். இதில் திரளான இரசிகர்கள் காலை 8 மணிமுதல் தொடங்கி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தி.மு.க.வினர் பலரும் கலந்துகொண்டனர்.

உண்ணாநிலை போராட்டம் என்பது பெரியார் கொள்கைக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இது தமிழுணர்வு போராட்டம் என்பதால் பெரியார் திராவிடர் கழகம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மாநகரத்தலைவர் தோழர் அ.குமார் வாழ்த்துரை தெரிவித்தார். பின்னர் பேசிய கோவில்பட்டி விஜய் இரசிகர் மன்றத்தலைவர் தமிழர்களுக்கு எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் ஆட்சிகள் மாறினாலும் தமிழர்களுக்காக போராடும் ஒரே இயக்கம் பெரியார் திராவிடர்கழகம் மட்டுமே. அவர்கள் இந்நிகழ்ச்சியில் ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று உரையாற்றினார். நிகழ்வில் இராசபக்சேவை கண்டித்து இளைஞர்கள் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிற்றம்பலம்( தி.மு.க.) தூத்துக்குடி பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் , மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் , தமிழ்நாடு மாணவர் கழக தோழர் வ.அகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

No comments: