Wednesday, November 12, 2008

இராசபக்சே கு பாடைகட்டி இறுதி ஊர்வலம்

இன்று காலை 10 மணியளவில் ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் பெரியார் தி.க.வின் தலைமை கழக உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன் தலைமையில் இராசபக்சே க்கு பாடை கட்டி மரண இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலம் எப்படி இருக்குமோ அதைப்போன்றே தோழர்கள் அனைவரும் அமைதியாக வெள்ளை வேட்டி மற்றும் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த காவல்துறையினர் தோழர்கள் அனைவரையும் கைது செய்தனர். 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று கைதாகினர். அனைவரும் ஒரு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதில் விடுதலைச்சிறுத்தைகள் , ஆதித்தமிழர் பேரவை , தமிழ்தேசியப்பொதுவுடைமைக்கட்சி , ம.தி.மு.க , புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் பல அமைப்பினர் கலந்துகொண்டனர்.

-அகரன்

No comments: