Sunday, October 5, 2008

பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் & சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி








தூத்துக்குடி மாநகரில் 20.09.2008 அன்று மாலை காந்தி சிலை முன்பு தந்தை பெரியாரின் 130 வது பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் சிற்பி இராசனின் மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாட்டினை மாநகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார் , மாநகரச்செயலாளர் தோழர் பால்.அறிவழகன் மற்றும் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தோழர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

மறுநாள் மாலை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்கோட்டையில் பெரியாரின் 130 வது பிறந்தநாள், அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் சிற்பி இராசனின் மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு , மாவட்டத்துணைத்தலைவர் க.மதன் மற்றும் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சிகளில் சிறப்புரையாக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். தோழர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

செய்தி:
வ.அகரன்

நிழற்பட உதவி - பால்.அறிவழகன், பாலு போட்டோசு.

No comments: