Saturday, October 25, 2008

நீதிமன்றத்தில் இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர்

நேற்று இரவு கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான் மற்றும் அமீர் அவர்களை காவல்துறையினர் இன்று காலை சென்னையிலிருந்து 7.15 மணி விமானத்தில் மதுரைக்கு அழைத்து வந்தனர். தகவல் அறிந்த பெரியார் திராவிடர்கழகத்தின் மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோழர்கள் இயக்குநர்கள் அமீர் & சீமானை இராமேசுவரத்துக்கு அழைத்து செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் நடுவணரசைக்கண்டித்தும் முழக்கமிட்டுக்கொண்டே வாகனத்தில் வந்தார்கள்.

இத்தகவல் அறிந்த விடுதலைச்சிறுத்தைகள் , தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் பல தமிழின உணர்வாளர்களும் இணைந்துகொண்டனர்.

காலை உணவினை காவல்துறையினரும் இயக்குநர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் பரமக்குடியில் உள்ள ஒரு விடுதியில் முடித்த பின்னர் இராமேசுவரம் நீதிமன்றத்துக்கு 11.30 மணியளவில் கொண்டுசெல்லப்பட்டனர்.

நீதிமனறத்திற்கு முன்பாக அனத்து தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரண்டு நிற்கின்றனர்.
இந்நிகழ்வினை மதுரை தோழர் முருகேசன் , தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் மற்றும் இராமநாதபுரம் தோழர் நாகராசன் போன்றோர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments: