Saturday, October 25, 2008

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டம்


சிங்கள வெறியன் இராசபட்சேவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழினத்தைக்கொன்று குவிக்கும் அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன்சிங்கைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் 24-10-2008 வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

சென்னை பொன்னேரியில் காலை 11 மணியளவில் தோழர் நிலவழகன் தலைமையில் 300 கும் மேற்பட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர், திருப்பூரில் தோழர் கதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஈழ ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் திண்டுக்கல், தஞ்சை , திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் சிறப்பாக நடத்தினார்கள்.

சி்ங்கள இனவெறியன் இராஜபக்சேவுடன் கூட்டுசேர்ந்து தமிழினத்தை கொன்றுகுவிக்கும் மன்மோகன்சிங்கை கண்டித்தும் ஆவடி பகுதியில் 24/10/2008 காலை 11 மணியளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றினணந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்.அன்பு அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்.வரதன், அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்.குணாளன் அவர்கள் , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்.பரிதி அவர்கள் மற்றும் புரட்சிகர இனளஞர் முன்னணியின் தோழர்.கணேசன் அவர்கள் , ஆகியோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இறுதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தோழர்.குமரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

No comments: