Saturday, October 25, 2008

கோவையில் தமிழுணர்வாளர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழுணர்வாளர்களை விடுதலை செய்யக்கோரி பெரியார் திராவிடர்கழகம் சார்பில் கோவையில் இன்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை பெரியார் தி.க.வின் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் திரளான மாணவர்களுடன் கலந்துகொண்டார்.

No comments: