Saturday, October 11, 2008

சிங்கள அரசைக்கண்டித்து கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று காலை(11.10.2008) 10.30 மணியளவில் கோவை சட்டக்கல்லூரி முன்பு அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளரும் ஆகிய சட்டக்கல்லூரி மாணவர் தோழர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் சிங்கள அரசைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டக்கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்று சிங்கள இந்திய அரசைக்கண்டித்து முழக்கமிட்டு தங்கள் கண்டனத்தினை தெரிவித்தனர்.

(செஞ்சோலை படுகொலையின் பொழுது கோவையில் தோழர் ந.பன்னீர்செல்வம் சிங்கள கொடியினை எரித்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது)


செய்தி:

வ.அகரன்

No comments: