Sunday, April 20, 2008

தூத்துக்குடி ஒன்றிய பகுதியில் சாதி ஒழிப்பு பரப்புரை பயணம்




புதுக்கோட்டை


மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமை உரைக்குப்பின் மன்னை இராம.முத்துரமலிங்கம் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் உரைக்குப்பின் ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாலர் க.கண்ணன் உரையாற்றும் பொழுது சாதி ஒழிப்பிற்ககான பெரியார் திராவிடர் கழகம்(சாளரப்பட்டி & நம்பியூரில்) ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து ஆதித்தமிழர் பேரவை பெரியார் திராவிடர் கழகத்துடன் தொடர்ந்து போராடும் என தெரிவித்தார். இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றும் பொழுது சாதி ஒழிப்பிற்காக பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்துள்ள பணிகளை பட்டியலிட்டார். சாதி ஒழிப்பு பரப்புரை நடத்துவது ஓட்டு அரசியலுக்கு அல்ல என்றும் பெரியார் இயக்கம் பலன் எதிர்பாராது சாதி ஒழிப்பதற்காக உண்மையாக முழுமையாக போராடுகிறது. சட்டத்தினால் சாதியை ஒழித்து விட முடியும் என்பதை பெரியார் திராவிடர் கழகம் ஏற்கவில்லை. மக்கள் மனமாற்றமே சாதியை ஒழிக்கும் எனக் கூறினார். இறுதியில் ச.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார் .


சாயர்புரம்.


கிறித்துவ மக்கள் அதிகமாக வாழும் சாயர்புரம். பகுதியில் மன்னை இராம.முத்துரமலிங்கம் இசை நிகழ்ச்சியோடு தொடங்கிய பரப்புரை பயணத்தில் பொறிஞர் சி.அம்புரோசு தலைமை உரைக்குப் பின்பு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ரா.வே.மனோகர் பேசும் பொழுது தனக்குக் கீழாக ஆதிக்கம் செலுத்த ஒரு சாதி இருக்க வேண்டும் என்பதை மக்கள் ஒழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் பேசும் பொழுது 1956ல் சாதியை தூக்கிப்பிடிக்கும் அரசியல் சட்டப்பிரிவை எரிக்கும் போராட்ட வரலாற்றினை எடுத்துக் கூறி நாம் எல்லாம் இந்துக்கள் என வலம் வரும் இந்துத்துவ அமைப்புகள் , அனைத்து சாதியனரும் அர்ச்சகராகலாம் என்றால் எதிர்ப்பு தெரிவிப்பதும் கல்வி வேலை வாய்ப்பில் பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கேட்டால் எதிர்ப்பு தெரிவிப்பதும் அவர்களின் சாதி மேலாண்மையை
வெட்ட வெளிச்சமாக்குகிறது என்றும் இக்கோரிக்கையை வைக்கும் போது இவர்கள் இந்துக்களாக தெரியவில்லையா? என விளக்கி உளுந்தூர்பேட்டை எரையூரில் தலித் கிறித்தவர்கள் மீதான சாதி ஒடுக்கு முறையை விளக்கமாக எடுத்துக் கூறினார். இந்து மதமும் கிறித்துவ மதமும் எந்த மதமும் சாதியை ஒழிக்காது என்றும் மக்கள் மனமாற்றமே சாதியை ஒழிக்கும் என தமிழர்களே சாதி ஒழிப்பிற்கான மனமாற்றத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார் . இறுதியில் ச.கா.பாலசுப்பிரமணியன்
நன்றி கூறினார்.
செய்தி : வ.அகரன்

No comments: