Sunday, April 20, 2008

சிறுபான்மையினர் பகுதியில் சாதி ஒழிப்பு பரப்புரை( ஏரல்&குறும்பூர்)




ஏரல்:

மன்னை இராம.முத்துராமலிங்கம் அவர்களின் இசைநிகழ்ச்சியுடன் பரப்புரை தொடங்கியது. பொறிஞர் சி.அம்புரோசு அவர்களின் தலைமை உரைக்குப் பின் ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கண்ணன் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் மக்கள் சனநாயக கட்சி மாவட்ட பொறுப்பாளர் சடையன் ஆகியோர் உரைக்குப் பின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கமாக சிறப்புரையாற்றினார். மாவட்டச்செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மதிய உணவிற்கு குறும்பூரில் பெரியார் தொண்டரும் தமிழ்த்தேசிய இயக்க பொறுப்பாளருமான சி.மலர்வேந்தன் அவர்கள் பரப்புரை பயணக்குழுவினரை வரவேற்று ஆட்டுக்கறி பிரியாணி வழங்கினார். 80 அகவை கடந்த நிலையிலும் பெரியார், அம்பேத்கர் தமிழ்த்தேசியம் போன்ற கொள்கைகளை விடாதுபின்பற்றி வரும் அவரிடம் உணவிற்குப் பின் தோழர்கள் கலந்து பேசி பழைய செய்திகளை கேட்டறிந்தார்கள்.மனித உரிமைகள் பாதுகாப்பு கழக வழக்கறிஞர் இராமசந்திரன் உதவியாக இருந்தார்.


குறும்பூர்:

மாலை 4 00 மணிக்கு மீண்டும் பரப்புரையை தொடங்கிய பயண குழுவினர் குறும்பூரில் முண்று இடங்களில் பரப்புரை செய்தனர் . குறும்பூர் கடைவீதியில் நடைபெற்ற பரப்புரையில் மன்னை இராம.முத்துராமலிங்கம் இசை நிகழ்வுக்குப்பின்பு பொறிஞர் சி.அம்புரோசு தலைமை உரையாற்றினார். ஆதித்தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் க.கண்ணன் , புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு ஆகியோர் உரைக்குப்பின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் சாதி ஒழிக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும் வாகறையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இரட்டைக்குவளை உடைப்பு போராட்டம் பற்றியும் , பெரியார் திராவிடர்கழகம் பெரியாரின் அனைத்து கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி போராடி வருகிறது என விளக்கமாக சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாவட்டச்செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். பன்னாட்டு தமிழுறவு மன்ற பொறுப்பாளர் அன்பழகன் & தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி பொறுப்பாளர்களும் பரப்புரை பயணத்தில் கலந்துகொண்டனர்.

No comments: