Saturday, October 23, 2010

பெரியாரியல் கொள்கை விளக்க கூட்டம்





சாதி மதங்களை ஒழிக்கும் பெரியாரின் மனிதநேயப்பணி முடிக்க பெரியாரியல் கொள்கை விளக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரையில் 23.10.2010 சனிக்கிழமை மாலை 6.00 நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா.உதயகுமார் தலைமையேற்றார், ஆழ்வை ஒன்றிய செயலாளர் நாத்திகம் பா.முருகேசனார், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வெ.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன், மாவட்டச்செயலாளர் கோ.அ.குமார், மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வின் இறுதியில் சாமியார்களின் பித்தலாட்டத்தை விளக்கும் மந்திரமா? தந்திரமா ? நிகழ்வினை பால்.அறிவழகன் நடத்தினார்.

நிகழ்வில் க.மதன், சா.த.பிரபாகரன், அமிர்தராசு, அகரன், நெல்லையிலிருந்து மாவட்டச்செயலாளர் சி.ஆ. காசிராசன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் நெல்லை பொறுப்பாளர் மாயா தோழர்களுடன் கலந்துகொண்டார்

இந்நிகழ்வின் முழுச்செலவினையும் அருணா ஒலி-ஒளி அமைப்பக உரிமையாளர் கடம்பா முருகன் ஏற்றுக்கொண்டார். தோழர்களுக்கு இரவு உணவினை ஆழ்வை ஒன்றிய செயலாளர் உதயக்குமார் குடும்பத்தினர் தங்கள் இல்லத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.















No comments: