Saturday, July 4, 2009

ஈழத்தமிழர் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி ஆந்திராவில் அரங்கக்கூட்டம்

ஈழத்தமிழர் மீதான இனவெறி தாக்குதலை நிறுத்தக்கோரியும், சம உரிமைகளை வழங்கக்கோரியும் இந்தியாவிலுள்ள ஆந்திரா மாநிலத்தில் EFLU பல்கலைக்கழக மாணவர்கள் , ஆந்திரபிரதேச மக்கள் சுதந்திர குழுவினர் இணைந்து அரங்கக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தியாவிலுள்ள ஆந்திரபிரதேசத்தில் இன்று(04.05.2009) மாலை 5 மணியளவில் EFLU பல்கலைக்கழக அரங்கத்தில் மாணவர்களால் அரங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, கிராந்தி சைதன்யா, பேராசியர் ஜாவித் ஆலம், சிபிசிஎல் கேசவன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றினையும், போராட்டத்தினையும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சென்று ஆதரவு திரட்டும் முயற்சியில் தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடக்கமாக தமிழ்நாடு மாணவர் கழகத்தின் பொறுப்பாளர்கள் ந.பன்னீர்செலவம், ப.பிச்சுமணி மென்பொருள் பொறியாளர் சிறீராம் ஆகியோரது முயற்சியில் ஆந்திர மாநில மாணவர்களோடு இணைந்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதைப்போல் மற்ற மாநிலங்களிலும் ஈழப்பிரச்சினையை எடுத்துச்செல்லும் முயற்சியில் மற்ற மாநில மாணவர்களோடு இணைந்து ஈடுபட்டுள்ளார்கள்.

04052009_andhra_001

04052009_andhra_002

04052009_andhra_003

04052009_andhra_004

04052009_andhra_005

04052009_andhra_005

04052009_andhra_006


நன்றி:

ஈழத்தமிழர் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி ஆந்திராவில் அரங்கக்கூட்டம்

No comments: