Monday, February 2, 2009

அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு ஏதிலிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்

அவசரச் செய்தி :
உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது
காவல்துறையினர் தாக்குதல்


சென்னை, 2-2-09.


ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர்.

செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட உண்ணா போராட்ட்தின் போது, "நீங்கள் விடுதலைப் புலிகளா?" என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர்.

இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின் காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இது குறித்த கண்டனங்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமால் இச்செய்திகளை கைபேசி, மின்னஞ்சல் மூலமாக அனுப்பி செங்கல்பட்டு களத்திற்கு சென்று நேரில் உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி : save-tamils@googlegroups.com

No comments: