Sunday, February 1, 2009

கொளத்தூரில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கடையடைப்பு பேரணி




சேலம் கொளத்தூரில் இன்று ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கடையடைப்பு மற்றும் தமிழின உணர்வாளர்களின் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

தமிழுணர்வாளர்கள் அனைவரும் கொளத்தூர் சோதனைச்சாவடியில் ஆரம்பித்து காவல் நிலையம் முன்பு ஒன்று கூடி பேரணியாக, கொளத்தூர் வடக்கு இராஜ வீதி , தெற்கு இராஜ வீதி வழியாக உணர்ச்சிபூர்வமாக முழக்கமிட்டுக்கொண்டே கொளத்தூர் பேருந்து நிலையத்தின் முன்பு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன் வீரத்தமிழன் முத்துக்குமரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக்கட்சிகளும், வியாபாரிகள், ஓட்டுநர் சங்க பொறுப்பாளர்கள் இந்திய அரசை கண்டித்தும், இலங்கை அரசை கண்டித்தும் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் பொதுமக்களுக்கு எமக்காகவும் குரல்கொடுங்களேன் குறுந்தகடு இலவசமாக வழங்கப்பட்டது.

பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றது.

No comments: