Monday, January 19, 2009

மாணவர்களே! எழுந்து நில்லுங்கள் போதும்!

மாணவர்களே! எழுந்து நில்லுங்கள் போதும்!

  • 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள்.

  • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்

  • இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது.

  • அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது.

  • அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள்.

  • தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார்.

ஆனால்,

    • தமிழினப் படுகொலை தொடர்கின்றது .

    • உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது.

    • அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன.

  • நாம் இன்று வேடிக்கைப் பார்த்திருந்தால், இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, “ உலகின் மிகப்பெரிய கல்லறை இலங்கை; அங்கும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்” என்று வரலாறு சொல்லும். ஏதாவது ஒரு புத்திசாலி மாணவன் கேட்கக் கூடும், “ கூப்பிடும் தூரத்தில் 6.5 கோடி தமிழர்கள் வாழ்ந்தார்களே, அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று .

நம்புங்கள், உங்களின் ஒருமித்த சிறு அசைவால் பல உயிர்களை காக்க முடியும்.

உரக்கச் சொல்லுங்கள் உலகுக்கு

நீங்கள் இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்று!

இன்னும் நம் உணர்வுகள் மலுங்கிவிடவில்லை என்று!

தமிழர் நாதியற்று போகவில்லை என்று!

21 ம் தேதி முதல் வகுப்பை புறக்கணிப்பீர் !



அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

கடந்த 6 மாதத்தில் போர் என்ற பெயரில் மறைக்கப்பட்ட உண்மைகள்.

  • வீட்டுக்குள் இருந்தால் குண்டுகளால் சாவு நிச்சயம் என்று நம்முடைய ஊரோடு நாம் இடம்பெயர்ந்து காட்டிலும், பதுங்குகுழியிலும் வாழ்ந்தால்

  • பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பு இல்லாதவை என்று மரத்தடிகளில் நம் வீட்டு பிள்ளைகள் பாடம் கற்றால்

  • 3 மாதத்திற்கு மேலாக காட்டிற்குள் பழம், இலை, தழைகளை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தால்

  • நாம் விட்டு சென்ற வீடும், பசு மாடுகளும் ‘கிளஸ்டர்’ குண்டுகளால் அழிக்கப்பட்டால்(கிளஸ்டர் குண்டுகள் ஐ.நா. வால் தடை செய்யப்பட்டவை).

  • திடீரென்று வந்த இராணுவக்காரர்கள், நான்காவது தெருவில் உள்ள நம் நண்பனை ‘தமிழன்’ என்ற ஒரே காரணத்திற்காக சுட்டுவிட்டு போனால்

  • நம் ஊரை விட்டு ஓடும் போது, குணடு வெடித்து சிதறிய குழந்தை ஒன்றின் இடது கை ஒன்றை மிதிக்க நேர்ந்தால்

  • காட்டில், நம் பக்கத்து வீட்டுக்காரர் பாம்பு கடித்து துடிக்கக் கண்டால்.

  • அவரை தூக்கிச் சென்று சேர்த்த மருத்துவ மனையில் பாம்புக் கடிக்கு மருந்து இல்லாமல், அவர் சாகக் கண்டால்.பிணங்களை அடக்கம் செய்ய வழியில்லாமல், அங்கங்கே விட்டு விட்டு இடம்பெயர்ந்தால்.

  • கிறுத்துமஸூக்கு முன்னும், பின்னும் நம் பக்கத்து ஊரில் உள்ள தேவாலயத்தில் குண்டு வீசப்பட்டால்..

  • நாம் ஓடி ஒளிந்த ஒரு ஊருக்குள் நம்மைப் போல் 4.5 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்து இருந்தால்.

  • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் 500 பேர் பலியாகலாம் என்ற நிலையில்.

  • இதை உலகுக்கு சொல்ல ஒரு பத்திரிக்கையும் இல்லை என்ற சூழ்நிலையில்

இது தான், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை. இதை நாம் அறிந்தால் துடித்து விடுவோம் என்றே நம் ஊடகங்கள் நமக்கு இதை மறைக்கின்றன. துடிப்போமா????

உண்மைகளை அறிய / வரலாற்றை அறிய

இந்த வலை தளங்களை பாருங்கள். / http://www.tamilnation.org/tamileelam.htm
http://www.puthinam.com/ - புதினம் / www.blackjuly83.com
http://www.tamilwin.com/ - தமிழ்வின் / www.tamilcanadian.com
http://www.sankathi.com/ - சங்கதி /
http://www.tamilnaatham.com/ - தமிழ்நாதம் /
http://www.pathivu.com/ - பதிவு /
http://www.nitharsanam.com/ - நிதர்சனம் /

No comments: