Friday, December 19, 2008

பெரியார் திராவிடர்கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் இயக்குநர் சீமான் கைது

தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணி தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி பெ.மணியரசன் மற்றும் இயக்குந சீமான் ஆகியோர் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையிலுள்ள மர்மங்களை தெளிவாக எடுத்துக்கூறி உரையாற்றினார்கள். இராசீவ் மரணத்திலுள்ள மர்மங்களையும் சுப்பிரமணியசுவாமி போன்றோரின் தொடர்புகளையும் தெள்ளத்தெளிவாக பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மக்களுக்கு விளங்கும் வகையில் எடுத்துக்கூறினார்.

இயக்குநர் சீமான் தனது உரையில் காங்கிரசு கட்சிகளின் அரசியல் விளையாட்டையும் பதவி ஆசையையும் தெள்ளத்தெளிவாக உரையாற்றினார். தோழ்ர் பெ.மணியரசன் அவர்களும் விடுதலைப்புலிகளை ஆதரித்தும் இராசபக்சே மற்றும் மன்மோகன் அரசைக்கண்டித்து விளக்கவுரையாற்றியிருந்தார்கள்.

இவர்கள் பேச்சுக்கு தமிழக காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இயக்குனர் சீமான் வத்தலகுண்டு அருகே இன்று காலை கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நண்பகலில் பெரியார் திராவிடர் கழகம் தலைவர் கொளத்தூர் மணியையும் காவலர்கள் கைது செய்தனர். பெ.மணியரசன் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: