Sunday, October 5, 2008

திருச்செந்தூர் நகரில் பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

திருச்செந்தூர் நகரில் அக் 1 அறிவன் (புதன்) மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் 130 வது பிறந்த நாள் விழா மற்றும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வ.உ.சி. திடலில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையேற்க
தோழர் பால்.அறிவழகனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்புரையாக மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் பங்கேற்றார். மற்றும் தோழர் பாவலர்.தமிழேந்தி, தி.மு.க இலக்கிய அணியைச் சேர்ந்த தோழர் மருத்துவர் செ.வெற்றிவேல் , புரட்சிகர இளைஞர் முன்னணி யின் தோழர் இரா.தமிழரசன் , ஆதித்தமிழர் பேரவையின் தோழர்.சு.க.சங்கர் போன்றோர் பங்கேற்றனர்.

தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நிகழ்ச்சியானது இரவு 11 மணிவரை நடைபெற்றது.

செய்தி: வ.அகரன்

No comments: