Thursday, October 16, 2008

ஈழத்தமிழர் ஆதரவு போராட்ட செய்திகளின் தொகுப்பு

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்


திங்கள்(13.10.2008) மாலை 4 மணியளவில் கோவை மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை போன்று வேடமிட்டு சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விரிவு »


ஈழத்தமிழர் மீதான கொடுந்தாக்குதலைக் கண்டித்து தமிழக மாணவர் கழக ஆர்ப்பாட்டம்


இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது நடத்திவரும் தாக்குதலைக் கன்டித்தும், இந்தக் கொடுந்தாக்குதலுக்கு ராணுவ மற்றும் பிற உதவிகளையும் செய்துவரும் இந்திய அரசாங்கத்தை கண்டித்தும் நேற்று(14.10.2008) காலை 11 மணியளவில் கோவையில் செஞ்சிலுவை சங்கம் அருகில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில், அவ்வமைப்பின் தமிழக பொறுப்பாளர் தோழர் ந. பன்னீர்செல்வம் தலைமையில் கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் பழ.பிச்சுமணிமுன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

விரிவு »


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விரிவு »



(2ம் இணைப்பு)
ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய "THE HINDU" அலுவலகம் முற்றுகை.
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 02:03.28 PM ] []
இந்தியாவில் வெளிவரும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு கைக்கூலி நாளிதழ் இந்து இராமின் "THE HINDU"என்ற பத்திரிகையின் இன்றைய(14.10.2008) வெளியீட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் தமிழக மக்களின் தமிழுணர்வையும் கொச்சைபடுத்தி செய்தி வெளிட்டிருந்தது. [மேலும்]
நன்றி : www.tamilwin.com

ஈரோட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி
திங்கள் மாலை நான்கு மணியளவில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்ற அமைப்புக்கள் ஏற்பாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்....




தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:21.09 AM ] []
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். [மேலும்]

நன்றி : www.tamilwin.com

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த அனைத்துக்கட்சிகளுக்கும் பெரியார் திராவிடர் கழகம் நன்றி !


கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கருகில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

விரிவு »





கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிங்கள அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்!


நேற்றுக் காலை(11.10.2008) 10.30 மணியளவில் கோவை சட்டக்கல்லூரி முன்பு அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளரும் ஆகிய சட்டக்கல்லூரி மாணவர் தோழர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் சிங்கள அரசைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விரிவு »


நன்றி : செய்திகளை வெளியிட்ட www.tamilwin.com, www.meenagam.com , www.tamilseythi.com மற்றும் ஏனைய இணையதளங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும்.

நன்றி

- பெரியார் திராவிடர் கழகம்

- தமிழ்நாடு மாணவர் கழகம்

தொகுப்பு : தூத்துக்குடி அகரன்

No comments: