Saturday, August 9, 2008

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள அரசைக் கண்டித்தும் பாதுகாக்கத் தவறிய இந்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின





தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள அரசைக் கண்டித்தும் பாதுகாக்கத் தவறிய இந்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(09.08.2008) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி பெரியார் திராவிடர்கழக நகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையேற்க மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆழ்வை ஒன்றிய செயலாளர் தோழர் நாத்திகன் இ.சேதுராமசாமி முன்னிலை வகிக்க ஆதித்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் க.கண்ணன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!
பெரியார் தி.க. ஆர்ப்பாட்டம்!
தமிழக மீனவர்களை
சுட்டுத்தள்ளும் சிங்கள காடையரை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!
இந்திய அரசே! இந்திய அரசே!
மீனவர்கள் மீதான தாக்குதலை
வேடிக்கை பார்க்காதே! வேடிக்கை பார்க்காதே!
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
மீனவர்கள் படுகொலையை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
தமிழக அரசே! தமிழக அரசே!
மீட்டெடு! மீட்டெடு!
கச்சத்தீவை மிட்டெடு!
சிங்களவன் கடலிலே
மீனவர்களை சுடுகிறான்
தடுக்க வேண்டிய இந்திய அரசு
மௌனம் கலைவது எப்போது!
இந்தியாவில் பயிற்சி பெற்று
இந்தியாவில் ஆயுதம் வாங்கி
இந்தியனையே கொல்லுறான்
தடுக்க வேண்டிய இந்திய அரசு
சிங்களக்காரன் விருந்துக்குப்போகிறான்
தமிழக மீனவர்களுக்கு
பாதுகாப்பிற்கு
ஆயுதம் வழங்கு! ஆயுதம் வழங்கு!
கொடுக்காதே! கொடுக்காதே!
தமிழக மீனவர்களை
சுட்டுத்தள்ளும் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்காதே! ஆயுதம் கொடுக்காதே
இந்திய அரசே! ஆயுதம் கொடுக்காதே!
பயிற்சி அளிக்காதே! பயிற்சி அளிக்காதே!
தமிழக மீனவர்களை
சுட்டுத்தள்ளும் சிங்களவனுக்கு
பயிற்சி அளிக்காதே! பயிற்சி அளிக்காதே!
கச்சத்தீவு தமிழர்நிலம்
தமிழர் உரிமையை நிலைநாட்டிட
தமிழர்களே அணிதிரள்வீர்!
பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக பேச்சாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.
அவரை தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் , உலக திருக்குறள் பேரவையைச் சேர்ந்த தோழர் மோ.அன்பழகன் மற்றும் பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு ஆகியோர் தங்களது கண்டனத்தினை மக்கள் மத்தியில் பதிவு செய்தனர்.
இறுதியாக கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தினை சேர்ந்த பனி.சுந்தரிமைந்தன் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பாக நிறைவுரை வழங்கினார். பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் தனது கண்டனத்தை பதிவு செய்து நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழகத்தின் மாவட்டச்செயலாளர் சா.க.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , மாணவரணி தோழர் வ.அகரன், தோழர் சி.அமிர்தராசு, தோழர் கே.சந்திரசேகர் ,சு.மகராசன் , தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து போன்றோர் கலந்துகொண்டனர்.
மேலும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சி।சுஜித், ஆதித்தமிழர் பேரவை மாவட்டசெயலாளர் தோழர் இரா.வே.மனோகர், தோழர் மு.சேகுவேரா, தோழர் அ.செந்தில்குமார், தோழர் ச.காளிமுத்து மற்றும் திரளாக தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


செய்தி: வ.அகரன்
நிழற்படம்: பால்.அறிவழகன்

No comments: