Friday, September 10, 2010

அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னார் ஜவஹர் கொடும்பாவி எரித்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது

மாணவி ஜோதி தற்கொலை வழக்கில் உண்மையை மறைக்கப்பார்க்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னார் ஜவஹரை கண்டித்து இன்று (10.09.2010) காலை தூத்துக்குடியில் உருவப்பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவையின் மாணவரணி சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட மாணவரணித்தலைவர் சண்முகவேல் தலைமையேற்றார். அ.மனோகர், கௌதமன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments: