Wednesday, January 28, 2009

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டம் முடிவு

ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்தக்கோரி செங்கல்பட்டில் 14 சட்டக்கல்லூரி மாணவர்கள் (22.01.2009) முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்காம் நாளாகிய 25.01.2009 அன்று கெம்புக்குமார் மற்றும் ஆறுமுக நயினார் ஆகிய இருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கும் போராட்டத்தினை தொடர்ந்தனர்.

ஏழாம் நாளாகிய இன்று(28.01.2009) அதிகாலை 5 மணிக்கு காவல்துறை மிரட்டி கைதுசெய்கிறோம் என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறவைத்தனர்.ஆனால் அந்த மாணவர்கள் சிகிச்சை பெறும் மருந்து ஊசிகளை பிடிங்கி எறிந்தனர். அங்கேயும் உண்ணாநிலையை தொடர்ந்தனர்.

இத்தகவலறிந்த செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டு வந்து அம்மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மருத்துவமனைக்கு வெளியில் ஒன்று கூடி ஈழத்தமிழருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.

அதன் பின்னர் தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவராக வந்து அம்மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கல்பாக்கம் பாவலரேறு தமிழ்வழி தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகள் வந்து மாணவர்களுக்கு வாழ்த்துதெரிவித்து போரைநிறுத்தக்கோரியும் தலைவர் பிரபாகரன் வாழ்க என்றும் முழக்கமிட்டனர்.

பின்னர் மாலை 5.30 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து போராடுவதாக உறுதியளித்ததன் பேரில் உண்ணாநிலைப் போராட்டத்தினை மாணவர்கள் கைவிட்டனர். பின்னர் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தினை முடித்துவைத்தார்.



போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விவரம்:
1) திருமுருகன்
2) இராச்குமார்,
3) மணிவேல்
4) விசயகுமார்
5) இராசா
6) பிரவீன்
7) முனீசுகுமார்
8) ஆறுமுகநயினார்
9) சுரேசு
10) கெம்புக்குமார்
11) பிரபு
12) மூர்த்தி
13) இராசதுரியன்
14) முஜீபீர் ரகுமான்
இம்மாணவர்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் கடைசி வரை தகவல்தொழில்நுட்பத்துறை மாணவர்கள் செந்தில் , அருண்சோரி , சிறிராம் , பெரியார் திராவிடர்கழகத்தின் ஆ.பாரதிராசா , காஞ்சிபுரம் மக்கள் மன்ற மகளிர் மகேசு , இராஜேசுவரி , தமிழ்மகிழ்நன் (த.ஒ.வி.இ) , செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.



மேலும் படங்கள் காண : http://picasaweb.google.com/barat82

நிழற்படங்கள் : ஆ.பாரதிராசா

No comments: