Tuesday, December 30, 2008

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் தூத்துக்குடியில் கருத்தரங்கம்


இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் மாலை 6 மணியளவில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக்குழுவின் அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் இ.அதிசயக்குமார் தலைமையேற்றார். பா.ம.க தோழர் அ.வியனரசு முன்னிலை வகித்தார். தோழர் சு.ப.இராமச்சந்திரன் சிறப்பாக இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

பெரியார் திராவிடர்கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவை இரா.வே.மனோகர் , மீனவர் கூட்டமைப்பின் தமிழ்மாந்தன் , தமிழர் தேசிய இயக்க தோழர் சு.க.மகாதேவன் , ம.தி.மு.க வழக்கறிஞர் தோழர் நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.

சிறப்புரையாக இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு ஈழ நிலவரங்கள் பற்றியும் இந்தியாவின் அனுகுமுறை பற்றியும் தெளிவாக விளக்கினார்.

பல்வேறு அமைப்புக்களும் , திரளான தமிழுணர்வாளர்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

No comments: