Tuesday, November 25, 2008

ஈழத்தமிழருக்கு ஆதரவாக சேலத்தில் 1000 பேர் கைது





இந்திய பொதுவுடைமைக்கட்சி சார்பில் ஈழத்தமிழருக்கு ஆதரவான மறியல் போராட்டம் சேலம் மாவட்ட இ.பொ.க. செயலாளர் தோழர் ஜீவானந்தம் தலைமையில் சேலம் தலைமை தபால்நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர்கழக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் பெரியார் திராவிடர்கழகத்தோழர்கள் 200 க்கும் மேற்பட்டோர் பெரியார் தி.க. மாவட்ட செயலாளர் சக்திவேல் ஒருங்கிணைப்பில் கலந்துகொண்டனர். மேலும் தோழர் தாமரைக்கண்ணன் (மதிமுக) , காவேரி MLA (பா.ம.க), அருள் (பா.ம.க) ( இளைஞரணி) , கோ.சீனிவாசன் CPI(ML), சிவப்பிரியன் (தமிழ் தேசிய இயக்கம்) , த.தே.பொ.க பிந்துசாரன் , தேசியவாத காங்கிரசு இரகுபதி மாவட்ட செய்லாளர் , த.தே.வி.இ. தோழர் சேகர் மற்றும் கைக்குழந்தைகளுடன் 200 பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கைதாகி நேரு கலையரங்கத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இ.பொ.க. , ம.தி.மு.க , பா.ம.க., தேசியவாத காங்கிரசு மற்றும் ஏனைய அமைப்புத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டு கைதானார்கள்.









செய்தி : அகரன்

No comments: