Thursday, October 23, 2008

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட 18 சட்டக்கல்லூர் மாணவர்கள் கைது

சட்டக்கல்லூரி மற்றும் சென்னையிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் 150 பேர் இன்று மதியம் 2 மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டார்கள். அப்பொழுது மாணவர்களை இழிவாக பேசிய தூதரக அலுவலக அதிகாரி ஒருவரை தூதரக இரும்பு வாயிலை உடைத்து மாணவர்கள் உட்புகுந்து கற்களால் தாக்கினார்கள்.அலுவலகத்திற்கு பெரும்சேதம் ஏற்பட்டது. அப்பொழுது வந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துவக்கினால் சுடுவதற்கு தயாரானார்கள், வானத்தை நோக்கி இருமுறை துவக்கினால் சுட்டார்கள். மாணவர்கள் மதில் சுவரை தாண்டி ஏறிக்குதித்து துவக்குகுண்டுகளிலிருந்து தப்பித்தார்கள். துவக்குக்கு அஞ்சாமல் உள் நின்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 18 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்

No comments: