Friday, April 25, 2008

தீண்டாமைக்கொடுமை இரட்டைக்குவளை முறை தென்காசியில்...

தென்காசி அருகே அய்யாபுரத்தில் இரட்டைக்குவளை முறையை தேநீர் கடையில் அமுல்படுத்தியதைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட பொறுப்பாளர்கள் அருகேயுள்ள காவல்நிலையத்தில் எழுத்துவழி புகார் அளித்தார்கள். இதனை ஏற்றுக்கொண்ட காவல்துறை ஆய்வாளர் உடனே அப்பகுதிக்கு சென்று தேனீர் கடை உரிமையாளருக்கு அறிவுரை வழங்கி இந்நிலை நீடிக்கக்கூடாது என்றுக்கூறி நடவடிக்கை எடுத்தார்.


இதனையறிந்த ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் பகுதிக்குள் நுழைந்து காவல்துறையில் புகாரை அளித்தது யாரென்று கேட்டு புகார் தெரிவித்தவர் யாரென்று தெரியவில்லை என்றால் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம் என்று அப்பகுதி மக்களை மிரட்டியுள்ளார்கள். மேலும் யாரென்று கூறாவிட்டால் அப்பகுதியில் தொழில் ஏதும் செய்வதற்கு ஒருவரையும் விடமாட்டோம் என்றும் ஆதிக்கசாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டியுள்ளார்கள்.


இத்தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தினரும் மற்றும் ஆதித்தமிழர் பேரவையினரும் தனித்தனியாக காவல்துறையினரிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரியபாதுகாப்பை அளிக்க வேண்டுமென்றும் சட்டத்தின் ஆட்சியை முறையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தற்சமயம் கலவரம் ஏற்படக்கூடிய வாய்ப்பே அப்பகுதியில் நிலவுகிறது.

செய்தி : அகரன்

No comments: