Sunday, December 16, 2007

தூத்துக்குடியில் தலித் மக்களை இழிவுபடுத்திய குசராத் முதல்வர் பயங்கரவாதி நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில்
தலித் மக்களை இழிவுபடுத்திய குசராத் முதல்வர்
பயங்கரவாதி நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனித மலத்தை மனிதன் அள்ளுவது கடவுளுக்கு செய்யும் புண்ணியம் , அவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என சாதி திமிரோடு பேசிய குசராத் முதல்வர் பயங்கரவாதி நரேந்திர மோடியை கண்டித்து 10.12.2007 மாலை 7.00 மணி அளவில் தூத்துக்குடி தாளமுத்துநகர் முதன்மை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான பொறிஞர் சி.அம்புரோசு தலைமை வகித்தார். தூத்துக்குடி நகர செயலாளர் பால்.அறிவழகன் முன்னிலை வகித்தார், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் தமிழரசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார், தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி விளக்கவுரையாற்றினார். மாவட்டச்செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், மாவட்டத்துணைத்தலைவர் வே.பால்ராசு, நகரத்தலைவர் கோ.அ.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை பொ.பொன்ராசு, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் பீட்டர் ஆகியோர் கண்டன உரையினை பதிவு செய்தனர். நிகழ்வில் , தலைமை செயற்குழு உறுப்பினர் சி.ஆ.காசிராசன் , நகர துணைத்தலைவர் சா.த.பிரபாகரன் , மாவட்ட துணைச்செயலாளர் க.மதன், வ.அகரன் , அறிவுபித்தன், மனித உரிமை பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் வழக்கறிஞர் இராமச்சந்திரன் , புரட்சிப்புலிகள் பொறுப்பாளர் வழக்கறிஞர் கலைமுருகன் , விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் ஆ.ஆறுமுக நயினார் மற்றும் பெரியார் தி.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


செய்தி

வ.அகரன்

No comments: