Tuesday, May 22, 2018

தமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம்


தமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம்

முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவனத்தின் ச்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தில் தமிழக அரசின் காவல்துறையினரால் தோழர் தமிழரசன் கொல்லப்பட்டுள்ளார்.

புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் தமிழரசன் எப்பொழுதும் அமைதியான புன்சிரிப்புடன் தெளிவான சிந்தனையுடன்  இருப்பவர். தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தமிழரசனின் பங்கும் இருக்கும். தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியெங்கும் தெருமுனைக்கூட்டங்கள் போட்டு தமிழ் மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியதில் தோழர் தமிழரசனுக்கு பெரும்பங்குள்ளது.


தமிழீழத்தில் 2008 2009 கால கட்டத்தில் சிறீலங்கா அரசால் மக்களால் படுகொலைசெய்யப்பட்ட பொழுது தூத்துக்குடி முழுவதிலும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கு ஆதரவாக மக்களிடத்தில் பரப்புரை செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழீழப்பொங்கல் தோழர் தமிழரசன் அவர்களாலேயே நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் நிழற்படங்கள் அனைத்து தமிழீழ ஆதரவு நாளிதழ்களிலும் இணையதளங்களிலும் வெளிவந்திருந்தது...

உழைக்கும் மக்களின் உரிமைக்காக தன் இறுதி வரை குரல்கொடுத்த தோழர் தமிழரசன் தமிழக அரசின் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தற்செயலாக கொல்லப்பட்டார் என்பதை மனது ஏற்க மறுக்கிறது.









Photos: http://periyaarpaasarai.blogspot.in/2008/12/blog-post_26.html

Sunday, July 22, 2012

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே!

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பாக கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மாலை 5 மணியளவில் தோழர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்வு, மாவட்ட தலைவர் அன்புரோசு தலைமை யில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர பொறுப் பாளர் சிங் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆதித் தமிழர் பேரவை சூரியன் துவக்க உரையாற்றினார். தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.அ.குமார், பொருளாளர் மதன், தூத்துக்குடி நகர செயலாளர் பால் அறிவழகன், அமிர்தராசு, கனகராஜி உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, July 10, 2012

இன்று(10.07.2012) இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெரியார்திக தலைவர் கொளத்தூர் மணி பேசுகிறார்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று இரவு (10.07.2012)  9 மணி அளவில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனி படுகொலை தொடர்பாக பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் பல அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பேசுகிறார்.

Sunday, June 17, 2012

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

[காணொளி] சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.




http://www.periyarthalam.com/2012/04/20/eelam-tamil-tamilar-dravidar-kolathurmani-periyardk/

Tuesday, June 12, 2012

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! - கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று ... மேலும்>>

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம்
சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம்: சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் ... மேலும்>>

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்

அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம்
கேள்வி : மனு.... மனு... என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே! பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சா°திரம் பற்றி. கேள்வி : அது என்ன மனுதர்ம சா°திரம்? பதில் : ... மேலும்>>

களப் பணியில் கழகத் தோழர்கள்

களப் பணியில் கழகத் தோழர்கள்
பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள் 20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ... மேலும்>>

பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம்

பெண்ணின் பெயர் அடையாளத்தையும்  பெயர்த்து எறியும் மனுதர்மம்
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: திருமணமான ஒரு பெண், கணவனைச் சார்ந்து வாழ வேண்டும்; ‘சுயாதீனமாக’ அதாவது சுய புத்தியைப் பயன்படுத்தும் உரிமையே இல்லை என்கிறது பார்ப்பன ... மேலும்>>

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்

‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்
1919 - அது மட்டுமா? நாயர் லண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிர° சார்பில் சுயராஜ்யம் கேட்டு வாதாடவும், நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா ... மேலும்>>

மீண்டும் நுழைவுத் தேர்வா?

மீண்டும் நுழைவுத் தேர்வா?
கல்வித் துறையில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்திய அரசு 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. ... மேலும்>>

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய ... மேலும்>>

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’

எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: மனுதர்மக் காவலருக்கு புகழாரம்! காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற ... மேலும்>>
Page 1 of 15:1 2 3 4 » Last »

Wednesday, June 6, 2012

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்
1919 - இந்திய சீர்திருத்த விஷய மாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாம° பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப் பினரின் தூண்டுதலின்படி படுக்கையி லிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி ... மேலும்>>