Friday, October 8, 2010

ஏதிலி முகாம் மக்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்றதாக பெரியார் திகவின் புதுவை மாநிலத்தலைவர் கைது




தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத்தலைவர் லோகு. அய்யப்பன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.



பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் 1995-ல் ராவணன் பகுத்தறிவு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். 2001-ல் ஜெயலலிதாவுடன், வீரமணி கூட்டணி அமைத்தபோது வெளியேறிய கொளத்தூர் மணி, கோவை.ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கினர்.

இதற்கு கொளத்துர் மணி தலைவரானார். அப்போது பெரியார் திராவிடர் கழகத்துடன் தனது ராவணன் பகுத்தறிவு இயக்கத்தை லோகு.அய்யப்பன் இணைத்துக்கொண்டார்.

2005-ல் பிரான்சு நாட்டிற்கும், 2006-ல் இலங்கைக்கும் சென்று பலரை லோகு.அய்யப்பன் சந்தித்து வந்துள்ளார்.

இதன்பின் இயக்குனர் சீமானுடன் லோகு.அய்யப்பன் நெருங்கிப்பழகி வந்தார். இயக்குனர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நாள்தோறும் இவரது வீட்டிலிருந்து உணவு வழங்கி லோகு.அய்யப்பன் தனது நட்பை வெளிப்படுத்தினார்.

செய்தி: மாலைமலர்

No comments: