Friday, November 28, 2008

மழைக்கு விடுமுறை விடும் அரசே குண்டு மழையில் வாழும் என் ஈழத்தமிழனுக்கு எப்பொழுது விடுமுறை? -தோழர் பால்.பிரபாகரன்

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாடு மாணவர்கழக பொதுக்கூட்டம்

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் தோழர் மருத்துவர் எழிலன் தலைமையில் மாணவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நவம்பர் 27 அன்று மாலை 7 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்தி சிலை அருகே தமிழ்நாடு மாணவர்கழகம் மற்றும் பெரியார் திராவிடர்கழகம் சார்பில் வாகன பிரச்சாரக்குழுவினருக்கு வரவேற்பு நிகழ்வும் பெரியார் தி.க. மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் அம்புரோசு தலைமையில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் க.கண்ணன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் இரா.தமிழரசன், மனித உரிமை பாதுகாப்பு மய்யம் தோழர் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் மற்றும் தலித்திய சமூக நீதி உரிமைப்பேரவையின் தோழர் அ.தவராசுபாண்டியன் ஆகியோர் சிங்கள அரசுக்கெதிராக தங்களது கண்டன உரையை சிறப்பாக பதிவு செய்தார்கள்.

இந்நிகழ்வுக்கு பெரியார் தி.க.வின் மாவட்டத்தலைவர் தோழர் கோ.க.குமார் மற்றும் தோழர் நெல்லை சி.ஆ.காசிராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பெரியார் தி.க.வின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுவதாக இருந்தது தொடர்மழையில் தமிழகம் பெங்களூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலநிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் இந்நிகழ்வில் அவரால் பங்கேற்க இயலவில்லை.

சிறப்புரையாக தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தமிழக பொறுப்பாளரும் தமிழர்க்கு எதிரான இந்து நாளிதழை எரித்து "இந்து நாளிதழ்" அலுவலகத்தினை தாக்கி கைதானவரும் செஞ்சோலை படுகொலையின் பொழுது சிங்கள அரசின் கொடியை எரித்து சிறை சென்றவருமான தோழர் கோவை.ந.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பாக தனது கண்டனவுரையாற்றினார்.

அவரை தொடர்ந்து பெரியார் தி.க.வின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றும் பொழுது தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் - தோழர் ரேவதி இணையர் அவர்களின் குழந்தையும் தோழர் க.யாழ் திலீபன் அவர்களின் தம்பிக்கு "பிரபாகரன்" என்று தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி பிரபாகரன் வாழ்க என்று வாழ்த்தினார். பொதுமக்களும் பிரபாகரன் வாழ்க என்று உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டனர்.





தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மருத்துவர் எழிலன் , தோழர் அன்பு , தோழர் சென்னை அன்பு தனசேகரன் ஆகியோர் சிறப்பாக பெரும் எழுச்சியோடு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க. மாவட்ட துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் , மாவட்டதுணைத்தலைவர் வே.பால்ராசு, , தமிழ்நாடு மாணவர்கழக தோழர் வ.அகரன் , பெரியார் தி,க. மாவட்ட துணைசெயலாளர் தோழர் பால்.அறிவழகன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடினை சிறப்பாக செய்தனர். மேலும் இந்நிகழ்வில் ஆழ்வை ஒன்றியச்செயலாளர் நாத்திகம் இ.சேதுஇராமசாமி , பெ.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் தோழர் செல்லத்துரை , இளையதோழர் பி.யாழ் பிரபாகரன் , தோழர் க.யாழ் திலீபன் மற்றும் பல அமைப்பினரும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Wednesday, November 26, 2008

பற்றி எரிகிறது ஈழம் - தூத்துக்குடியில் பேரணி ஆர்ப்பாட்டம்



இலங்கை இந்திய அரசுகளை உடனே போரை நிறுத்த வலியுறுத்தி தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி பால விநாயகர் ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு நடைபெற்றது.

இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஆ தவராசுப் பாண்டியன்( மாவட்ட அமைப்பாளர் தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை) தலைமை தாங்கினார்.

தோழர் புலி. செ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். இப்பேரணியை தமிழிய புரட்சிப் புலிகள் தோழர் இர.க.சசி தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.

தொல்தமிழர் பேரவை தோழர் பறைமுதல்வன் , தமிழியப் புரட்சிப் புலிகள் தோழர் பாலம் ஆறுமுகம், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க அருட்திரு வெனி. இளங்குமரன் , ஆதித் தமிழர் பேரவை தோழர் வே.மனோகரன் பெரும்பான்மை மக்கள் கழக தோழர் க.வே.முருகேசன் ஆகியோர் சிறப்பாக தங்கள் கண்டன உரையை பதிவு செய்தனர்.

இறுதியாக விளக்கவுரையாக பெரியார் திராவிடர் கழக தலைமைக் கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் சிறப்பாக தமிழின விரோதிகளை அடையாளப்படுத்தியும் , போலி மார்க்சியம் பேசும் மார்க்சிசுடு கட்சி வரதராஜன் , காங்கிரசு கட்சி ஞானசேகரன் , சுப்பிரமணியசுவாமி, துக்ளக் சோ மற்றும் தினமலர் இந்து இராம் போன்ற தமிழின எதிரிகளை அடையாளப்படுத்தி தனது கண்டன உரையை சிறப்பாக பதிவு செய்தார்.





இந்நிகழ்வில் கிறித்துவ வாழ்வுரிமை இயக்க அருட்திரு சுந்தரி மைந்தன் , தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தோழர் தமிழ்மாந்தன் , தமிழ்நாடு மாணவர் கழக தோழர் வ.அகரன் , பெரியார் தி.க. மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் , பெரியார் தி.க. நகரச்செயலாளர் தோழர் பால்.அறிவழகன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.



செய்தி :அகரன்

நிழற்படம் : பாலு ஒலிஒளி கலையகம் (BALU PHOTOS)

Tuesday, November 25, 2008

ஈழத்தமிழருக்கு ஆதரவாக சேலத்தில் 1000 பேர் கைது





இந்திய பொதுவுடைமைக்கட்சி சார்பில் ஈழத்தமிழருக்கு ஆதரவான மறியல் போராட்டம் சேலம் மாவட்ட இ.பொ.க. செயலாளர் தோழர் ஜீவானந்தம் தலைமையில் சேலம் தலைமை தபால்நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர்கழக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் பெரியார் திராவிடர்கழகத்தோழர்கள் 200 க்கும் மேற்பட்டோர் பெரியார் தி.க. மாவட்ட செயலாளர் சக்திவேல் ஒருங்கிணைப்பில் கலந்துகொண்டனர். மேலும் தோழர் தாமரைக்கண்ணன் (மதிமுக) , காவேரி MLA (பா.ம.க), அருள் (பா.ம.க) ( இளைஞரணி) , கோ.சீனிவாசன் CPI(ML), சிவப்பிரியன் (தமிழ் தேசிய இயக்கம்) , த.தே.பொ.க பிந்துசாரன் , தேசியவாத காங்கிரசு இரகுபதி மாவட்ட செய்லாளர் , த.தே.வி.இ. தோழர் சேகர் மற்றும் கைக்குழந்தைகளுடன் 200 பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கைதாகி நேரு கலையரங்கத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இ.பொ.க. , ம.தி.மு.க , பா.ம.க., தேசியவாத காங்கிரசு மற்றும் ஏனைய அமைப்புத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டு கைதானார்கள்.









செய்தி : அகரன்

Sunday, November 23, 2008

இந்தியாவின்இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள குள்ள நரித்தனம் - இந்தியஅரசு மற்றும் உளவு நிறுவன அக்கரையின்மை

இந்தியாவின்இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள குள்ள நரித்தனம் - இந்தியஅரசு மற்றும் உளவு நிறுவன அக்கரையின்மை

- பெரியார் திராவிடர் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணி எச்சரிக்கை

சிங்களப் பேரினவாத அரசின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர் மீதான போர்நிறுத்தத்தை வலியுறுத்தும்
மாநாடு, கருநாடக மாநில பெரியார் திராவிடர் கழகத்ததினால் நடத்தப்பட்டது.

நவம்பர் 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.

சோமசாச வேதிகே என்ற அமைப்பின் சார்பில் அசோக்,கருநாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் அய்.இராசன்,
தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர். மீனாட்சி சுந்தரம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கலந்துக் கொண்டு, சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும், இந்த இனப்படுகொலைக்குத் துணைபோகும் இந்தியஅரசின் துரோகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து, பேராசிரியர்.சரசுவதி அவர்கள் சிறப்புரையாற்ற, பெரியார் திராவிடர் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணி அவர்கள் மாநாட்டு நிறைவுறையாற்றினார்.


பேராசிரியர்.சரசுவதி அவர்கள் தனது உரையில்,இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே, இலங்கை என்ற பெயரிட்டதே தமிழன் தான், இலங்கை திவுக்கு தாமிரபரணி என்ற பெயரும் உண்டு என்ற செய்திகளை சரித்திர சான்றுகளோடு விளக்கி பேசினார்.

கொளத்தூர்.மணி அவர்கள் தனது நிறைவுரையில், தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு கட்டுடைத்து வெளிப்படும் நேரத்தில்,சகோதர யுத்தம் என்றப் பெயரிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின் திரிபுவாதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் 2005 -இல் நடைபெற்ற தேர்தலில் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிப் பெற்றதையும்,இந்த அமைப்பில் மாற்று இயக்கத்தவர்கள் கூட, கடந்த கால தவறுகளை உணர்ந்து விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.

ஈழத்தமிழர் படுகொலைக்கு சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, இலங்கையின் இறையாண்மையை காக்கும் இந்தியாவின்இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள குள்ள நரித்தனத்தை......

"ஆபரேஷன் முத்துமாலை" என்றப் பெயரில், இந்தியதுணைக்கண்டத்தை சுற்றிலும்...தளங்களை அமைத்து வரும் சீனாவிற்கு சீறிலங்கா அரசு 1987-ராசீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறி இடமளித்திருப்பது -இந்தியாவின் பாதுகாப்பை காவு கேட்கும் நடவடிக்கை. இது பற்றி கவலைப்படாத அரசு மற்றும் உளவு நிறுவன அக்கரையின்மை குறித்தும் விரிவான நிறைவுரையாற்றினார்.

(அருணாசலபிரதேசம், சீனாவின் பகுதியே என்று அண்மையில் சீனம் குறிப்பிட்டிருப்பதும்,1962-இல் நடைப்பெற்ற யுத்தத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது நினைவு கூறத்தக்கது)

பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய இம்மாநாட்டில் கருநாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும்,அரசியல் கட்சியினரும், மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்

செய்தி : அகரன்

Friday, November 21, 2008

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு) தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை-20. செல்: 94441 20582, 94442 14175, 94434 39869



20, நவம்பர் 2008

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிற சாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
இதில் பங்குபெற்றோர்:


அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.

இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத் தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம் ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான த-த் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது. சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.



பின்னணி: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல், விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) த-த்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது. எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்’ என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராம-ங்கத் தேவரின் பிறந்தநாளில் ‘தேவர் ஜெயந்தி’ கொண்டாடுவதை
வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’ என்னும் பெயரிலுள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ என்னும் சொல்லை நீக்கி வெறும் ‘சென்னை சட்டக் கல்லூரி’ என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் த-த் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும் எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.



இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை ‘ராகிங்’ செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கே- செய்வது என்கிற வகையி-ன்றி சும்மா விசாரித்துக் ‘கலாய்ப்பது’ என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ‘‘என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் ‘அக்யூஸ்ட்’ ராமர் என்னுடைய சித்தப்பா’’ என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதி ரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற த-த் மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை. போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என த-த் மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதை ஒட்டி த-த் மாணவர்களை ‘‘தேர்வு எழுத வந்தால் தாக்குவோம். காலை ஒடிப்போம்’’ என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். த-த் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள த-த் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் த-த் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டு களுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.



நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(த-த்) மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு த-த் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குத-ல் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன் ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம். இது குறித்து விடுதியில் த-த் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர். தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.


ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.

நவ.12 வன்முறை:

இன்று காலை தேர்வு எழுத வந்த சில த-த் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் த-த் மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்தி-ருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் கேட்டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர்.

இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார். தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவி ஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளனர். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார். கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த-த் மாணவர்களிடம் பேசியுள்ளார். அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்-யுள்ளனர். சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார்.



இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே த-த் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை த-த் மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் த-த் மாணவர்களைத் திட்டிக் கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட-லும் பெருங் காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட த-த் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினார் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.


இன்றைய நிலை:

நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

1. குற்ற எண்.1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 த-த் மாணவர்கள் ‘மற்றும் பலர்’ குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 த-த் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச் செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட) பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2. குற்ற எண்.1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,

ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும் (‘மற்றவர்கள்’) சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.

3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில்

14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்கா-க இடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி(ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.


எமது பார்வைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன. அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.

2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன்சி-ங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.

3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு இர்ஞ்ய்ண்க்ஷ்ஹக்ஷப்ங் ஞச்ச்ங்ய்ஸ்ரீங்நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும், அனுமதியும் தேவையில்லை.

4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிப-க்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழி-ன் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப் புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.

5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா-யிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும்போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. சென்னை சட்டக் கல்லூரியில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் கா-யாக உள்ளதாக அறிகிறோம். ஆனால் அதே நேரத்தில் உப்ண்ற்ங் நஸ்ரீட்ர்ர்ப்ள் என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.



6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.

8. தலித் மாணவர்கள் தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத திருப்பதி சட்டக் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி கல்லூரியில் பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். த-த் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.

பரிந்துரைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள்

வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப் படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.

2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.

3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.

4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.

5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்கள் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.

6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்த-ன் பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

7. கல்லூரி ஆசிரியப் பணிக் காலியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சி-ங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு வார்டன் நியமிக்கப்பட வேண்டும்.

8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதி ஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும் Legal cell authority , High court Registry ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.

9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.


செய்தி : அகரன்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஊர்தி பரப்புரை பயணம்



தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர்கழகம் - பெரியார் தி.க. சார்பில் தமிழக மாணவர் கூட்டமைப்பு ஊர்தி பரப்புரை பயண வரவேற்பு மற்றும் பொதுக்கூட்டம்.

இனமான தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டிக்கொள்கிறோம்.

Sunday, November 16, 2008

ஈழத்தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆர்ப்பாட்டம்


[

இலங்கையில் ஜம்பத்தாண்டுகளுக்கு மேலாக சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைக்கும், சிறிலங்கப் படையினரின் அத்துமீறல்களுக்கும், இலங்கையின் புத்த சமயத்தினரின் சர்வாதிகாரப் போக்குகளுக்கும் ஆளாகித் துன்புற்றுச் சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு ஈழத்தமிழர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய உரிமை வாழ்வுக்குக் குரல் கொடுக்கும் விதமாக, பெங்களூர் தமிழ்ச் சங்கம் நவம்பர் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது. நிகழ்ச்சியைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்.திரு.முத்துச்செல்வன் தலைமையில், சங்கச் செயலாளர் திரு.தாமோதரன் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பெங்களூரில் உள்ள தமிழ் அமைப்புகளும்,அரசியல் கட்சியினரும், மாணவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

சேலத்தில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம்




16.11.08 தமிழகம் முழுதும் நடிகர் விஜய் நற்பணி மன்றத்தினர் ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னையில் விஜய் இருக்க மற்ற மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் இருந்தனர். சேலத்தில் சேலம் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் கிட்டத்தட்ட 8000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்க எழிச்சியோடு நடந்தது.

தமிழக வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதல்வன் சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். அவர் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பேச அடுத்து வந்து இருந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் ஈழ்ம் பற்றி பேசினர்.

புதியன பண்பாட்டு இயக்கத்தின் செந்தில்," ஒரு சிற்று எறும்பை கூட தொடர்ந்து அடித்தால் அது கொடுக்கை நிமிர்த்தி திருப்பி தாக்க முற்படும்,ஒரு புழுவை தாக்கினால் கூட அது பொறுக்காமல் தன் எதிர்ப்பை காட்டும் அப்படி இருக்க வீரம் செறிந்த தமிழர் இனத்தை பாசிச வெறியோடு சிங்கள அரசு தாக்கும் போது தவிர்க்க இயலாமல் தமிழர்கள் திருப்பி தாக்குகின்றனர். இது வீரம் செறிந்த தமிழ் ஈழத்தின் விடுதலை போராட்டம்.தன் இலக்கை அடையாமல் நிறுத்தாது" என்றார் எழிச்சியோடு.

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, " இங்கு நாம் இரண்டு மணி நேரம் மின் நிறுத்தம் ஏற்பட்டால் கூட உடனே போராடுகிறோம் அங்கோ 25 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தான் ஈழ தமிழர்கள் வாழ்கின்றனர். முதலில் அகிம்சை முறையில் இது போல் உண்ணாவிரதம் இருந்து போராடினார்கள். ஆனால் அங்கு துப்பாக்கி சூடு நடத்தி சிங்கள அரசு 400 தமிழர்களை கொன்றது.

அதன் பின் வேறு வகையான போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.அகிம்சை காந்தி தேசம் ஆயுதம் தர பௌத்தத்தின் சிங்கள அரசு தமிழர்களை கொன்று ஒழிக்கிறது. தற்போது நாம் கோருவது எல்லாம் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்திய அரசு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்கு உணர்வோடு ஆதரவு தந்த விஜய்க்கும் அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்". என்றார்.

இறுதியாக பேசிய மன்ற தலைவர் பார்த்திபன்," இந்தியாவில் பிறந்ததால் வெட்டியாக என் உயிர் போகும் என வருத்தப்படுகிறேன். அங்கு என் ஈழத்தில் பிறந்து இருந்தால் என் மக்களுக்காக குண்டு பட்டு என் உயிர் துறந்து இருப்பேன்" என்றார் உணர்ச்சி பொங்க!

குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, மற்றும் பல அமைப்பினர் பங்கேற்க மிக இறப்பாக உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிந்தது. சினிமா ரசிகர்களாக இருந்த இளைஞர்கள் நடிகர் விஜயின் ஊக்கத்தால் ஈழ தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவு தந்து தமிழர்களாக உயர்ந்து நின்றனர்.

ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து புதுவையில் தெருமுனைக்கூட்டங்கள்

ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து புதுவையில் தெருமுனைக்கூட்டங்கள்


ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்தும் இந்திய அரசு போரை நிறுத்த வற்புறுத்தக் கோரியும் புதுவை மாநில அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்டமாக புதுவை மேற்குப் பகுதி கிராமங்களில் 14-11-2008 அன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக புதுவை நகரப் பகுதிகளில் 15-11-2008 அன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக 17-11-2008 அன்று மாலை 4.00 மணிமுதல் புதுவை தெற்குப் பகுதி கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த தெருமுனைக் கூட்டங்களை பெரியார் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னின்று நடத்துகிறது மற்றும் பல்வேறு இயக்கங்கள் பங்கேற்கின்றன.

பெரியார் திராவிடர் கழக தோழர்கள் பெருமளவில் இந்த தெருமுனைக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். இந்த தெருமுனைக் கூட்டங்களில் இளைஞர் காங்கிரசு பாண்டியனை கைது செய்யக் கோரியும் புதுவை அமைச்சர் மலையாளி வல்சராஜ் பதவி விலகக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com