Saturday, October 25, 2008

Pirabhakaran 'Returns' To India-tehelka

PC VINOJ KUMAR travels through Tiger territory in Tamil Nadu, to understand why M Karunanidhi's ministers have resigned from the Centre


Support A child poses in a LTTE post in Sri Lanka
Photo: AP

IN 2002, THEN chief minister Jayalalithaa arrested Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) founder Vaiko and other politicians for their support to Sri Lanka's Tamil rebels. Six years later, the situation is utterly reversed, with the public mood in Tamil Nadu swinging radically in favour of the rebels. Recent local surveys by two of the state's leading media houses, the New Indian Express and Tamil weekly Ananda Vikatan, have found overwhelming ground-level support for the Sri Lankan Tamil liberation movement and for rebel leader, Velupillai Pirabhakaran. With reports of increasing Tamil casualties in the island country, public sympathy for Pirabhakaran and his outfit, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), has only been strengthened.

In spiralling protests across the state last fortnight, effigies of Sri Lankan President Mahinda Rajapakse were burnt in many places, as were copies of the English daily, The Hindu, for its alleged pro-Sinhala stand; the paper's office even came under attack in Coimbatore. Students boycotted classes, lawyers stayed away from the courts and the Tamil film industry staged a massive rally in Rameswaram on October 19. Political parties, their eye on the upcoming Lok Sabha polls, were forced to take up the Eelam cause. State MPS belonging to the Dravida Munnetra Kazhagam (DMK), the Congress, the Pattali Makkal Katchi (PMK), the CPI, CPM, and MDMK threatened to resign en masse if the Centre failed to pressure Sri Lanka into calling a ceasefire. With the standoff threatening to bring down the UPA Government (which has 16 DMK, five PMK, 10 Congress and two MDMK rebel MPs), the Indian Government is in contact with Colombo to find a face-saving solution.


Anger An effigy of the Sri Lankan President is burnt
Photo: BALAJI

Meanwhile, in Salem district, about 375 km southwest of Chennai, LTTE supporters are celebrating in Kolathur. "Just because a member of a family has killed someone, you don't pull his pictures out of the family album. He still remains part of the family. Pirabhakaran is part of our families. We are proud of him, he is a freedom fighter," says Kolathur Mani, leader of the socio-political outfit, the Periyar Dravidar Kazhagam (PDK). Pirabhakaran's photos adorn the walls of many houses and shops in the Kolathur area's villages. Locals say if the LTTE chief were to contest the local assembly seat, he would win hands down.
The Kolathur town panchayat comprises about 10 villages, which together have a population of around 75,000 people. About 2,000 of Pirabhakaran's cadre trained in one such village, Kumbarapatti, in the 1980s. "The boys were here for about three years. The village people provided them food and shelter," says Balasubramaniam, who did small chores around the camp. "The LTTE boys were well-disciplined. Many had suffered under the Sinhalese army. There were boys from affluent families, who had lost all they had and who had seen their mothers and sisters raped before their eyes."
In these villages, it hardly matters that Pirabhakaran is an accused in the assassination of former prime minister Rajiv Gandhi, or that the LTTE is banned in India. Many have named their children after Pirabhakaran. Housing colonies have been given the names of LTTE martyrs: Suba Thamilchelvan and Dileepan. Last year, villagers collected over a tonne of rice for the Eelam Tamils when Thamizh Desiya Iyakkam leader Pazha Nedumaran appealed for relief materials. In Kumbarapatti stands a bus shelter built in memory of Ponammaan, the LTTE camp in-charge whose helpful ways earned him the villagers' love. "The LTTE had an old, battered Willys jeep, which they used to buy provisions from the Kolathur market. Ponammaan used to offer the jeep to help transport sick people to hospital," recalls local resident Dhandapani. The shelter was built in 1989, when Ponammaan died in Sri Lanka; two years later, the villagers fought back when Congressmen damaged the structure after Rajiv Gandhi's assassination. "They asked them if they had ever seen Rajiv or eaten with him. Ponammaan was in their midst for three years and had shared their joys and sorrows," says Mani.

IN 2006, NEARLY 500 schoolchildren from the area took out a procession protesting the Sri Lankan air attack that killed 60 children in an orphanage. "These protests are spontaneous because the Eelam Tamils are our brothers and sisters," says Balakrishnan, otherwise known as 'Tiger' Balu for his diehard espousal of the LTTE cause. His shop, the Tigers' Auto Electrical Works, has the LTTE logo on its signboard: a tiger's head ringed with bullets. "I am an LTTE supporter," declares medicine-seller Nallathambi. "My whole family admires Pirabhakaran." Madhu, who runs a saloon named after LTTE leader Dileepan, turns emotional. "I am prepared to give the Tigers any kind of support. We supported them before, and we will continue to do so." he says.

Kolathur remained a hotbed of LTTE activity even after Rajiv Gandhi's assassination in 1991. In 1993, Kiruban, an LTTE cadre who escaped from custody while being transported to the Trichy court, was said to have gone underground in Kolathur for a while before he slipped out of the country to Eelam via the sea route. The car he had hijacked to flee the police was found burnt near Kolathur. In 1994, PDK leader Mani was detained under the Terrorist and Disruptive Activities (Prevention) Act on charges of aiding the escape of an LTTE convict. He was arrested again in 1995 for his alleged links to the dramatic escape of 43 LTTE cadres from Vellore Fort through a 126ft-long underground tunnel they had dug. Villagers said some of the escapees hid in the Kolathur forests before they fled to Sri Lanka.
Till a couple of years ago, many in Kolathur received LTTE publications such as their monthly bulletin Erimalai. The magazines stopped after the war intensified in Sri Lanka. But people here kept themselves abreast of the happenings in Eelam through the Tamil Eelam Television, a two-hour daily broadcast put out by the LTTE. "The half-hour news bulletin gave an accurate account of the happenings in Eelam. But there have been no transmissions for the last six months," says TS Palanisamy, a Kolathur quarry owner. It is suspected that the Tigers' transmission tower has been damaged in the conflict. With locals alleging biased coverage of the war in the Indian media, many tune in to international radio stations instead. VCDs on the conflict are also available in some places.
With pro-LTTE passions running as high as they do here, none of Tamil Nadu's political parties would want to be seen lagging when it comes to a show of hands for Prabhakaran's army. What that means for the UPA, the Centre has only a few days more to test.

thanks : www.teheleka.com

கோவையில் தமிழுணர்வாளர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழுணர்வாளர்களை விடுதலை செய்யக்கோரி பெரியார் திராவிடர்கழகம் சார்பில் கோவையில் இன்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை பெரியார் தி.க.வின் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் திரளான மாணவர்களுடன் கலந்துகொண்டார்.

நீதிமன்றத்தில் இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர்

நேற்று இரவு கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான் மற்றும் அமீர் அவர்களை காவல்துறையினர் இன்று காலை சென்னையிலிருந்து 7.15 மணி விமானத்தில் மதுரைக்கு அழைத்து வந்தனர். தகவல் அறிந்த பெரியார் திராவிடர்கழகத்தின் மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோழர்கள் இயக்குநர்கள் அமீர் & சீமானை இராமேசுவரத்துக்கு அழைத்து செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் நடுவணரசைக்கண்டித்தும் முழக்கமிட்டுக்கொண்டே வாகனத்தில் வந்தார்கள்.

இத்தகவல் அறிந்த விடுதலைச்சிறுத்தைகள் , தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் பல தமிழின உணர்வாளர்களும் இணைந்துகொண்டனர்.

காலை உணவினை காவல்துறையினரும் இயக்குநர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் பரமக்குடியில் உள்ள ஒரு விடுதியில் முடித்த பின்னர் இராமேசுவரம் நீதிமன்றத்துக்கு 11.30 மணியளவில் கொண்டுசெல்லப்பட்டனர்.

நீதிமனறத்திற்கு முன்பாக அனத்து தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரண்டு நிற்கின்றனர்.
இந்நிகழ்வினை மதுரை தோழர் முருகேசன் , தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் மற்றும் இராமநாதபுரம் தோழர் நாகராசன் போன்றோர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டம்


சிங்கள வெறியன் இராசபட்சேவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழினத்தைக்கொன்று குவிக்கும் அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன்சிங்கைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் 24-10-2008 வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

சென்னை பொன்னேரியில் காலை 11 மணியளவில் தோழர் நிலவழகன் தலைமையில் 300 கும் மேற்பட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர், திருப்பூரில் தோழர் கதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஈழ ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் திண்டுக்கல், தஞ்சை , திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் சிறப்பாக நடத்தினார்கள்.

சி்ங்கள இனவெறியன் இராஜபக்சேவுடன் கூட்டுசேர்ந்து தமிழினத்தை கொன்றுகுவிக்கும் மன்மோகன்சிங்கை கண்டித்தும் ஆவடி பகுதியில் 24/10/2008 காலை 11 மணியளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றினணந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்.அன்பு அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்.வரதன், அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்.குணாளன் அவர்கள் , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்.பரிதி அவர்கள் மற்றும் புரட்சிகர இனளஞர் முன்னணியின் தோழர்.கணேசன் அவர்கள் , ஆகியோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இறுதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தோழர்.குமரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Friday, October 24, 2008

தமிழின எதிரி சுப்பிரமணியசாமி வீடு சூறை

மதுரையில் இன்று மதியம் 2 மணியளவில் தமிழின எதிரி பார்ப்பான் சுப்பிரமணியசாமி யின் வீட்டின் மீது தமிழ்நாடு மாணவர்கழக சட்டக்கல்லூரி மாணவர்களும் தமிழின உணர்வாளர்களும் தாக்குதல். மாணவர்களும் தமிழின உணர்வாளும் கைது.

Thursday, October 23, 2008

துவக்குக்கு அஞ்சா மாணவர்கள் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 18 பேரும் மாலை 7.30 மணியளவில் சொந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட 18 சட்டக்கல்லூர் மாணவர்கள் கைது

சட்டக்கல்லூரி மற்றும் சென்னையிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் 150 பேர் இன்று மதியம் 2 மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டார்கள். அப்பொழுது மாணவர்களை இழிவாக பேசிய தூதரக அலுவலக அதிகாரி ஒருவரை தூதரக இரும்பு வாயிலை உடைத்து மாணவர்கள் உட்புகுந்து கற்களால் தாக்கினார்கள்.அலுவலகத்திற்கு பெரும்சேதம் ஏற்பட்டது. அப்பொழுது வந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துவக்கினால் சுடுவதற்கு தயாரானார்கள், வானத்தை நோக்கி இருமுறை துவக்கினால் சுட்டார்கள். மாணவர்கள் மதில் சுவரை தாண்டி ஏறிக்குதித்து துவக்குகுண்டுகளிலிருந்து தப்பித்தார்கள். துவக்குக்கு அஞ்சாமல் உள் நின்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 18 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்

Wednesday, October 22, 2008

ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாதத்தை கண்டித்து தூத்துக்குடி பெரியார் திராவிடர்கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம்.



தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாகா சரியாக 3 மணியளவில் ஆர்ப்பாட்ட இடத்தில் திரண்டு ஈழத்தமிழரின் நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சிங்கள குண்டுவீச்சில் காயமடைந்தவர்களைப்போல் காயக்கட்டுகளை தோழர் அறிவுபித்தன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.


பின்னர் 4 மணியளவில் பெரியார் தி.க. மாவட்டத்தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச்செயலாளர் தோழர் இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் ,பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு , தலித்திய சமூக நீதி பேரவையின் தோழர் தவராசு பாண்டியன் , புரட்சிப்புலிகள் தோழர் கிட்டுபாலு ஆகியோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து சிறப்புரையாக கிறித்துவர் வாழ்வுரிமை இயக்கத்தின் அருட்தந்தை ஜார்ஜ் வில்பிரட் சிறப்பாக தனது கண்டனத்தினை பதிவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் விளக்கவுரையினை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் சிங்கள அரசின் சிங்கள வெறியினையும் ஜே.வி.பி. யின் தோழமை அமைப்பான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசுடு கட்சியின் பார்ப்பன முகத்தையும் இந்து இராம் போன்ற சிங்கள கைக்கூலிகளைப்பற்றியும், இராசீவ் காந்தியின் மர்ம மரணத்தில் ஜெயின் கமிசன் அறிக்கையில் வந்த சந்திராசாமி மற்றும் அப்பொழுது நடைபெற்ற அரசியல் சதிகளைப்பற்றியும் , அரசியல் பிரிவு தலைவர் மாவீரர் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களை இந்திய இராணுவமும் பாகிசுதான் இராணுவமும் இணைந்து கொன்றதைப்பற்றியும் , இங்குள்ள காங்கிரசு கட்சியின் மனிதநேயமற்ற செயலைப்பற்றியும் மக்களுக்கு தெளிவுபட விளக்கிகூறினார்.


இவ்வார்ப்பாட்டத்தினை பெரியார் தி.க. தோழர்கள் மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு, பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன்,மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , தோழர் அறிவுபித்தன் மற்றும் மாணவரணி தோழர் வ.அகரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து . ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் மாநில இளந்தமிழரணி தலைவர் தோழர் சு.க.சங்கர், அருந்ததியரசு, விடுதலைவீரன் , வீரக்கவுதம் , கிறித்துவர் வாழ்வுரிமை இயக்கத்தைச்சேர்ந்த வெனி.இளங்குமரன் , அருதந்தை சுந்தரிமைந்தன், அந்தன் , ஜெரோம் , அன்சல் புரட்சிப்புலிகள் தோழர்கள் பிரபாகரன் , கணேசு, பாண்டிராச், மாவட்ட ஒருங்கிணைபாளர் தாசு மற்றும் பொதுமக்களும் தமிழின ஆதரவாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி ஈழத்தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்ட முழக்கம்:
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்
பெரியார் தி.க. ஆர்ப்பாட்டம்
ஈழத்தமிழரை கொன்று குவிக்கும்
சிங்கள அரசைக்கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம்

சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கும்
இந்திய அரசைக்கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
ஈழத்தமிழரை கொன்று குவிக்கும்
சிங்கள அரசை கண்டிக்கிறோம்
சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கும்
இந்திய அரசைக்கண்டிக்கிறோம்

இந்திய அரசே இந்திய அரசே
ஈழத்தமிழரை கொன்று குவிக்கும்
சிங்கள அரசுக்கு
ஆயுத உதவி செய்யாதே

அனுமதியோம் அனுமதியோம்
எங்கள் வரிப்பணத்திலே
ஈழத்தமிழரை கொல்வதற்கு
இனியும் நாங்கள் அனுமதியோம்

இந்திய இராணுவமா?
சிங்களவனுக்கு கூலிப்படையா?
திரும்ப பெறு திரும்ப பெறு
சிங்களவனுக்கு அளித்துவரும்
இராணுவ உதவியை திரும்பபெறு

சிங்களவன் உனக்கு பங்காளியா?
தமிழன் என்ன பகையாளியா?

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
சிங்கள கைக்கூலி
இந்து இராமை கண்டிக்கிறோம்

தனிநாடு கேட்பது ஈழத்தமிழனின் உரிமை
அதை ஆதரிக்க வேண்டியது தமிழனின் கடமை
இடையில் வந்து தடைகள் போட
இந்து இராம் யாரடா?

எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்
ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்
ஈழத்தமிழரை காப்பாற்ற
உணவு வழங்கு மருந்து வழங்கு

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
தமிழக மீனவர்களை காப்பாற்ற
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு

மீட்டெடு மீட்டெடு
கச்சத்தீவை மீட்டெடு


வெல்லட்டும் வெல்லட்டும்
ஈழத்தமிழர் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்

மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்

Thursday, October 16, 2008

ஈழத்தமிழர் ஆதரவு போராட்ட செய்திகளின் தொகுப்பு..

ஈழத்தமிழர் ஆதரவு போராட்ட செய்திகளின் தொகுப்பு..

ஈழத்தமிழர் ஆதரவு போராட்ட செய்திகளின் தொகுப்பு

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்


திங்கள்(13.10.2008) மாலை 4 மணியளவில் கோவை மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை போன்று வேடமிட்டு சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விரிவு »


ஈழத்தமிழர் மீதான கொடுந்தாக்குதலைக் கண்டித்து தமிழக மாணவர் கழக ஆர்ப்பாட்டம்


இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது நடத்திவரும் தாக்குதலைக் கன்டித்தும், இந்தக் கொடுந்தாக்குதலுக்கு ராணுவ மற்றும் பிற உதவிகளையும் செய்துவரும் இந்திய அரசாங்கத்தை கண்டித்தும் நேற்று(14.10.2008) காலை 11 மணியளவில் கோவையில் செஞ்சிலுவை சங்கம் அருகில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில், அவ்வமைப்பின் தமிழக பொறுப்பாளர் தோழர் ந. பன்னீர்செல்வம் தலைமையில் கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் பழ.பிச்சுமணிமுன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

விரிவு »


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விரிவு »



(2ம் இணைப்பு)
ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய "THE HINDU" அலுவலகம் முற்றுகை.
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 02:03.28 PM ] []
இந்தியாவில் வெளிவரும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு கைக்கூலி நாளிதழ் இந்து இராமின் "THE HINDU"என்ற பத்திரிகையின் இன்றைய(14.10.2008) வெளியீட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் தமிழக மக்களின் தமிழுணர்வையும் கொச்சைபடுத்தி செய்தி வெளிட்டிருந்தது. [மேலும்]
நன்றி : www.tamilwin.com

ஈரோட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி
திங்கள் மாலை நான்கு மணியளவில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்ற அமைப்புக்கள் ஏற்பாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்....




தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:21.09 AM ] []
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். [மேலும்]

நன்றி : www.tamilwin.com

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த அனைத்துக்கட்சிகளுக்கும் பெரியார் திராவிடர் கழகம் நன்றி !


கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கருகில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

விரிவு »





கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிங்கள அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்!


நேற்றுக் காலை(11.10.2008) 10.30 மணியளவில் கோவை சட்டக்கல்லூரி முன்பு அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளரும் ஆகிய சட்டக்கல்லூரி மாணவர் தோழர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் சிங்கள அரசைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விரிவு »


நன்றி : செய்திகளை வெளியிட்ட www.tamilwin.com, www.meenagam.com , www.tamilseythi.com மற்றும் ஏனைய இணையதளங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும்.

நன்றி

- பெரியார் திராவிடர் கழகம்

- தமிழ்நாடு மாணவர் கழகம்

தொகுப்பு : தூத்துக்குடி அகரன்

Tuesday, October 14, 2008

ஈழத்தமிழருக்கு ஆதரவாக திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று(13.10.2008) மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தோழர் மு.தமிழ்மணி தலைமையேற்க தோழர் கி.வெங்கட்ராமன்(த.தே.பொ.க) , தோழர் துரை.அரிமா(தமிழர் தேசிய இயக்கம்) , தோழர் மனோகர் ஆகியோர் மற்றும் தோழர் சத்தியா(த.ஒ.வி.இ) ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையினை பதிவு செய்தனர். பின்னர் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்திற்கான விளக்கவுரையினை சிறப்பாக மக்களுக்கு எடுத்துக்கூறினார்.

தோழர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றும் பொழுது பெய்த கடும்மழையினை பொருட்படுத்தாது தோழர்களும் தமிழின ஆதரவாளர்களும் ஆர்வத்தோடு கேட்டனர். இரவு 7.30 மணியளவில் மழை பெய்துகொண்டிருக்கும் பொழுதே தோழர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடும் முழக்கமிட்டுக்கொண்டு கலைந்து சென்றனர். நிகழ்வில் இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழக நகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார் ,மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு, பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன்,மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , மாணவரணி தோழர்கள் வ.அகரன், தோழர் சி.அமிர்தராசு, பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து . ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் அருந்ததியரசு, சண்முகவேல் , அ.அன்புசெல்வன் மற்றும் பொதுமக்களும் தமிழின ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

கண்டன முழக்கங்கள் & தீர்மானம்:

இந்திய அரசே சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத் தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்குவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்! ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிர்க்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு,உடை,மருந்துகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத் தடை போட்டாய்!

சிங்களப் படைக்குப் போர்க்கப்பல்,நவீனப்படைக்கருவி
கள்,ரேடார் கருவிகள்,வெடி மருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அழிக்கவும் 256 படைத்துறையினரையும் அனுப்பி உள்ளாய்!

ஈழத் தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!
சிங்களன் உனக்குப் பங்காளி;தமிழன் உனக்குப் பகையாளியா?


இந்திய அரசே.....

1. சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக்கருவிகள் அனைத்தையும் திருப்பப் பெறு!
2. சிங்களபடைகளுக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத்துறையிர் அனைவரையும் திருப்ப அழை.
3. இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப் படையினர்களுக்கும்,காவல்துறையினருக்கும் பயிற்சி கொடுக்காதே.
4. நேரடியாகாவோ அல்லது மறைமுகமாகவோ சிங்கள அரசுக்கு அரசியல்,பொருளியல்,படைவகை உதவி எதுவும் செய்யாதே!

செய்தி : அகரன்
நிழற்படம் : பாலு ஸ்டூடியோ

Saturday, October 11, 2008

சிங்கள அரசைக்கண்டித்து கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று காலை(11.10.2008) 10.30 மணியளவில் கோவை சட்டக்கல்லூரி முன்பு அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளரும் ஆகிய சட்டக்கல்லூரி மாணவர் தோழர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் சிங்கள அரசைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டக்கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்று சிங்கள இந்திய அரசைக்கண்டித்து முழக்கமிட்டு தங்கள் கண்டனத்தினை தெரிவித்தனர்.

(செஞ்சோலை படுகொலையின் பொழுது கோவையில் தோழர் ந.பன்னீர்செல்வம் சிங்கள கொடியினை எரித்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது)


செய்தி:

வ.அகரன்

Wednesday, October 8, 2008

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த அனைத்துக்கட்சிகளுக்கும் நன்றி!நன்றி!நன்றி!

கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கருகில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.



-வ.அகரன்

Tuesday, October 7, 2008

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பட்டுக்கோட்டையில் தமிழின ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் காலை முதல் மாலை வரை தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்.

இன்று காலை 9 மணியளவில் அஞ்சல் நிலையம் முன்பாக அனைத்துக்கட்சிதோழர்களும் பொதுமக்களும் திரளாக ஒன்று கூடினர். காலை 10 மணியளவில் தமிழீழ ஆதரவாளர் மருத்துவர் மு.செல்லப்பன் தலைமையேற்க பழ.சக்திவேல், சி.பக்கிரிசாமி (இ.பொ.க), உஞ்சியரசன் (விடுதலைச்சிறுத்தைகள்) , வழக்குரைஞர் காமராசு(ம.தி.மு.க) , கு.பாரி( பெரியார் தி.க.) , ரெ.ச. இளவரசன் (பெரியார் தி.க) ஆகியோர் வரவேற்புரை ஆற்ற இரா.திருஞானம் (இ.பொ.க.(மா)) தமிழீழ விடுதலைக்கு ஆதரவான தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

உரையாற்றியவர்கள் :

அரங்க.குணசேகரன் (மனித உரிமைகள் கழகம்) ,

வழக்குரைஞர் பிரகாசம்,( தமிழின ஆதரவாளர்),

மருத்துவர்.சுப்பிரமணியம்( தமிழின ஆதரவாளர்),

"அரசு பிளாசா" திருநாவுக்கரசு(தமிழின ஆதரவாளர்),

கே.நமச்சிவாயம்(பா.ச.க)

சதா.சிவக்குமார்(ஆதி திராவிடர் பேரவை),

வீரையன் (தி.க)

திருமாறன்(ம.தி.மு.க)

இளந்தென்றல்(விடுதலைச்சிறுத்தைகள்)

வைகறை( தமிழ் தேசியப்பொதுவுடைமைக்கட்சி)

டி.பி.நாதம்(இ.பொ.க)

வி.டி.கோபு(இ.பொ.க)

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக விளக்கவுரையாற்றியவர்கள் :


தூத்துக்குடி பால்.பிரபாகரன்,
தலைமைக்கழக உறுப்பினர்,
பெரியார் திராவிடர் கழகம்.


புதுக்கோட்டை பாவாணன்,
தமிழர் கழகம்.

இயற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) இந்திய அரசாங்கமானது சிங்கள அரசாங்கத்துக்கு எவ்வித பொருளாதார உதவியோ இராணுவ பயிற்சியோ அளிக்கக்கூடாது.

2) தமிழீழ விடுதலைக்கான அரசியல் தீர்வினைக்காண வேண்டும்.

3) தமிழக மீனவர்களை தாக்கும் சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இந்திய - இலங்கை கூட்டு ரோந்து நடவடிக்கையை நிறுத்தவேண்டும்.

5) ஈழத்தமிழர் பிரச்சினையில் நடுவணரசை நிர்ப்பந்திக்கும் வகையில் ஆளும் திமு.க. அரசானது அனைத்துக்கட்சிக்கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.


நன்றியுரை :

சூரப்பள்ளம் முத்துகிருட்டிணன்.

மாலை 6 மணியளவில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

பொதுமக்களும் அனைத்துக் கட்சியினரும் , கட்சிசாரா பிற அமைப்புத்தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Monday, October 6, 2008

தீபாவளி தமிழர் விழாவா? - பெரியார்



தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்

Sunday, October 5, 2008

திருச்செந்தூர் நகரில் பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

திருச்செந்தூர் நகரில் அக் 1 அறிவன் (புதன்) மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் 130 வது பிறந்த நாள் விழா மற்றும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வ.உ.சி. திடலில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையேற்க
தோழர் பால்.அறிவழகனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்புரையாக மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் பங்கேற்றார். மற்றும் தோழர் பாவலர்.தமிழேந்தி, தி.மு.க இலக்கிய அணியைச் சேர்ந்த தோழர் மருத்துவர் செ.வெற்றிவேல் , புரட்சிகர இளைஞர் முன்னணி யின் தோழர் இரா.தமிழரசன் , ஆதித்தமிழர் பேரவையின் தோழர்.சு.க.சங்கர் போன்றோர் பங்கேற்றனர்.

தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நிகழ்ச்சியானது இரவு 11 மணிவரை நடைபெற்றது.

செய்தி: வ.அகரன்

தூத்துக்குடி புதுக்கோட்டையில் பெரியார் 130வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்கோட்டையில் பெரியாரின் 130 வது பிறந்தநாள், அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் சிற்பி இராசனின் மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு , மாவட்டத்துணைத்தலைவர் க.மதன் மற்றும் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளில் சிறப்புரையாக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். தோழர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.





செய்தி :
வ.அகரன்

நிழற்படம் : பால்.அறிவழகன், பாலு நிழற்பட நிலையம்.

பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் & சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி








தூத்துக்குடி மாநகரில் 20.09.2008 அன்று மாலை காந்தி சிலை முன்பு தந்தை பெரியாரின் 130 வது பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் சிற்பி இராசனின் மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாட்டினை மாநகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார் , மாநகரச்செயலாளர் தோழர் பால்.அறிவழகன் மற்றும் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தோழர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

மறுநாள் மாலை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்கோட்டையில் பெரியாரின் 130 வது பிறந்தநாள், அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் சிற்பி இராசனின் மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு , மாவட்டத்துணைத்தலைவர் க.மதன் மற்றும் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சிகளில் சிறப்புரையாக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். தோழர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

செய்தி:
வ.அகரன்

நிழற்பட உதவி - பால்.அறிவழகன், பாலு போட்டோசு.

திருப்பூரில் நூற்றுக்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்கள் கைது

திருப்பூரில் பெரியார் அண்ணா சிலைகளை அகற்றுவோம் என்று அறிக்கை விடுத்திருந்த இந்துத்துவா பயங்கரவாதிகளை கண்டித்து இன்று(05.10.2008) காலை 9.30 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் இல.அங்ககுமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, October 4, 2008

பெரியார் கைத்தடி அணிவகுப்பு

பெரியார் அண்ணா சிலைகளை இடிக்க முயலும் மதவெறி கும்பல்களுக்கு எதிராக இன்று(05.10.2008) காலை 10 மணி அளவில் திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.